வெள்ளி, 3 ஜூலை, 2015

சிங்கப்பூர்- நினைத்தாலே இனிக்குமா?


சிங்கப்பூர் அழகு ..சுத்தம் ..
மனசில் பசக்குன்னு ஒட்டிக்குச்சு ..
நினைத்தாலே இனிக்கும், நிசம் தான், சொர்க்கம் போல தென்கிழக்காசியாவில் பூலோக சொர்க்கமாக போற்றப்படும் சிங்கப்பூர் , 
அடி ஆத்தி எம்புட்டு அழகு! ஆஹா!  Super..
இப்படி ஒரு சுத்தமா! வாய் பிளந்தேன்!

சிங்கப்பூர் பற்றி நாம் தெரிந்து கொண்டது, மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடு. விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் இந்தியர்கள் இருகின்றனர்.  மக்கள்தொகை: 5,183,700(2011 year) அவ்வளவு தான்!.  ஆனால் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நிறைய..

இங்க நமக்கு ஒரு இடம் இல்லாம போயிடுமா?  என்ற நம்பிக்கையில், வேலை தேட ஆரம்பித்தேன். Online Job websites apply பண்ணினேன். நாள் கட கடவென, நகர தொடங்கியது. Enquiry பண்ணி phone call கூட எதுவும் வர வில்லை. நிறைய தடவை போன்ல ஏதும் பிரச்சனையான்னு Check பண்ணது தான் மிச்சம்..
இம் ஹிம்!
Job Agencies / Consultants நேரவே பார்த்து வேலை வாய்ப்பு தேடலாம்னு கிளம்பினேன். Internation Plaza - Tanjong Pagar ல் நிறைய Consultants இருக்காங்க அங்க போய் பாருங்கன்னாங்க.
International Plaza - Reception - ல Consultant list வாங்கி நேராக சென்று apply செய்தேன்.  இந்த தகவல் எல்லாம் ஏன் சொல்றேன்னா..பய புள்ளைங்க யாரவது, சிங்கப்பூர்  வேலை முயற்சி பண்ணிங்கண்ணா உதவுமேன்னு தான்!

International Plaza building:..

 அங்க, "4வது Quarter வேலை வாய்ப்பு கம்மியாக தானே இருக்கும். இந்த நேரத்தில் ஏன் வந்தீர்கள் என கேட்டார்கள்? " ( நான் October மாதத்தில் சென்று இருந்தேன்).  Chinese new year - February வருது, அதற்க்கு பிறகு வேலை வாய்ப்பு அதிகம் இருக்கும், இப்ப சரியான நேரம் இல்லையே ஒன்னு, ரெண்டு பேரு சொன்னார்கள் வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. 

ஒரு மாதம் முடியும் நேரம், ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான் என்கிற நிலைமை. இந்த மாதிரி நேரத்தில், வேலை கிடைக்கலங்கிற விஷயம் பெருசா நிக்காது. பெருசா Build up பண்ணி வந்தோமே, ஊர்ல போய் அவுக முகத்தில முழிக்கறது எப்படிங்கறதுதான்! இதுக்கு இடையில, ஐயா, அண்ணன், தம்பி தீவிரமா, மாப்பிள்ளை பார்த்தார்கள். இம்ஹும் ஜாதகம் பொருந்தல. எல்லா ஜோசியரையும் போய் பாத்தாக! அவுக சொன்னகளாம்.."ஆமா ஜாதக கட்டம் House full, ராகு, கேது, சனி, செவ்வாய் எல்லாம்  உக்காந்து இருக்காகன்னு!..நடக்குமா? நடக்க விட்டும்ம்மான்னேன்!  எம்புட்டு பாசம்!(?) நம்ம கட்டத்துல உக்காந்து இருக்காக! 


நாமதான் ஒரு குறிக்கொளோட இருந்தோமா அத பத்தி எல்லாம் கவலை படவே இல்லை..
நான் , தீவிர ஆஞ்சநேயர் , பிள்ளையார் பக்தை. நேரா Little India -ல இருக்கிற வீர காளியம்மன் கோயில் போய் , ஆஞ்சநேயர் பார்த்து, எதோ அவருதான் என்னைய சிங்கப்பூர் வர சொன்ன மாதிரியும், போய் உரிமையா சண்டை போட்டேன். நம்மக்கிட்ட , வேண்டுதலே தனி "சாமி நீ அத பண்ணு , நான் இத செய்யறேன்னு"  பழக்கம் எல்லாம் இல்லை. முன்னாடியே நேர்த்திகடன் பண்ணிட்டு, நீங்க பாத்து பண்ணுங்கன்னு வேண்டுவேன் "

வீர காளியம்மன் கோயில்



அப்பதானே அவுங்களும் Commit ஆனதுக்கு ஏதாவது பண்ணுவாக!(?)
உஷ் அப்பா!

தம்பி, முயற்சி பண்ணது போதும் India கிளம்புன்னாக!
என் பேச்ச நானே கேக்கமாட்டேன்..இந்த விசயதுல ஹிம்..
சிங்கப்பூர் விசா extend பண்ண ஏதாவது குறுக்கு வழி இருக்கான்னு check பண்ணி பார்த்தேன். பக்கத்து நாட்டுக்கு போயிட்டு திரும்ப வந்தா இன்னொரு மாசம் கிடைக்கும்னாக!...அது போதாதா! அப்படியே எங்க சித்தி, மலேசியால இருந்தாகளா! மலேசியா புறப்பட்டேன்.
   
அங்கு 3 நாட்கள் டேரா போட்டு, திரும்ப வந்தேன்.

மீண்டும் தேடினேன், தேடினேன்! 
ஓடினேன் ஓடினேன்!
சிங்கப்பூர் எல்லைக்கே ஓடினேன் வேலை தேடி!
விசா முடிந்ததால் திரும்ப வந்து விட்டேன்! 


ஆம்..மனசுல பாரத்தோட, இந்தியா திரும்பினேன்! 

மனசெல்லாம், Chinese new year - February, Chinese new year - February என்று சொல்லி கொண்டு இருந்தது.  இரெண்டே மாதத்தில்,  இன்னொரு தடவை Try பண்றேன்னு சொன்னேன்!

என்ன ஆச்சு தெரியுமா? Pls wait...

திருக்குறள் 616
:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

பொருள்:
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

1 கருத்து: