செவ்வாய், 30 ஜூன், 2015

என் இலட்சியத்தை தேடி - 2!

இரண்டு shift வேலை, 7 am to  2 pm, 3pm to 10 pm, நான் 7 am to  2 pm Shift எடுத்து என் வேலையை ஆரம்பித்தேன். தஞ்சையில் 5.45 பஸ்சில் கிளம்பினால் தான் 7 மணிக்கு வர முடியும்.கொஞ்சம் சிரமமாக இருந்தது.  ஆரம்பத்தில்  வேலையில் ஒரு doubt , தஞ்சையில் centre -ல் தெரிந்த பெண்ணிடம் கேட்க போய், அந்த பெண் என்னிடம் "எப்படி சமாளிக்க போறீங்க?பேசாம வேலைய விட்டுங்கன்னார்.."  கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.


அதுக்கெல்லாம் கவலை படலை. இதுக்கெல்லாம் முடங்கி உக்காந்துட முடியுமா? ஒண்ணுமே தெரியலன்னா OK.  Practical experience, இல்லாததால சில கஷ்டம். எப்படியும் சமாளிக்கணும்னு  தோணுச்சு 
 
எனது morning Shift முடிந்து, மதியம்  3pm to 7 pm, என் வேலையை continue பண்ணினேன்.. தெரியாததை 2nd shift நபர்களிடம் கற்றுக்கொண்டு , என் வேலையை முடித்தேன். அதாவது 7 மணி நேரம் முடிக்க வேண்டியதை, கற்று கொண்டு 12 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய நிலைமையில் இருந்தேன். 2nd Shift நபர்கள் என்னை training எடுக்க வந்தவராக தான் நினைத்து இருப்பார்கள். வேற எதுவுமே பேச மாட்டேன், ரொம்ப அமைதின்னு நினைச்சு இருப்பாங்க. ஆனா உண்மை என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும்.


 3 மாதத்தில் 1st Shift - ல் 7 மணி நேரத்தில் வேலையை முடிக்கும்படி தேறினேன். நல்லபடியா ஒரு வருடம் 6 மாதம் ஓடியது.


 
மனதெல்லாம், சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் ஒன்றரை வருட experience போதுமேன்னு நினைத்தேன். வேலையை விட்டேன். வேலை பார்த்ததெல்லாம் தஞ்சை , திருச்சி, local company, சுத்தமா English communication கிடையாது. அவ்வளவாக பேசவும் தெரியாது. Tamil Medium ன்னு ஏற்கனவே புலம்புனத படிச்சு இருப்பீங்களே..இம். ... Chennai, Bangaloreன்னு Interview Attend பண்ணி இருக்கணும். அதுவும் இல்லை..எவ்ளோ தைரியம் பாருங்க? Singapore போகணும்னு முடிவு பண்ணிட்டேன் .
 
என் தொல்லை தாங்காமல், நம்ப அண்ணனுமானவர் (அதான் தம்பி)  Visa ஏற்பாடு பண்ண, ஏதோ  தைரியம்  flight book பண்ணி கிளம்பிட்டேன். அதுவும் local flight எல்லாம் இல்லை ,  Singapore Airlines...வேலை கிடைச்சுடும்னு அம்புட்டு நம்பிக்கை!
 
முதல் விமான பயணம். அதை அனுபவிக்கும் மன நிலையில் நான் இல்லை. கிளம்பி விட்டோம்? சாத்தியமா? மனதில் ஆயிரம் கேள்விகள்..
அந்த flight முழவதும், என் கனவால் நிரம்பியதாகவே இருந்தது.
 
Singapore Visa 15 நாட்கள் தான் கொடுத்தார்கள், மீண்டும் 15 நாள் extend பண்ணலாம் என்றார்கள். ஒரு மாதத்தில் வேலை வாங்க வேண்டும்??
 

என் கனவு நிறைவேறியதா? Pls wait...

 

திருக்குறள் :  591:

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
  

பொருள் :

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

 

2 கருத்துகள்: