ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

அதுவும், இதுவும்!

அப்பெல்லாம் சின்ன வயசுல, ஐயாவுக்கு மேல பயந்த மத்த ஆளுங்க..எல்லாம் வேற யாரு? எல்லாம் நீங்க தான். அதாங்க "பேய், பிசாசு." எந்த புண்ணியவான்/புண்ணியவதி முதல் முதலா "அங்க போகாத அது இருக்கு" "இங்க போகாத இது இருக்கு" (இப்பக்கூட பாருங்க அந்த effect! அந்த வார்த்தைய போடவே பயமா இருக்கு,  எங்க பக்கத்துல வந்து நின்னுடுமோன்னு).

அப்பெல்லாம் இந்த பய புள்ளைங்க வேற கிலிய ஏற்படுத்தும்!  ராத்திரியான பாம்புன்னு சொல்ல கூடாது! மேல சொன்ன வார்த்தை எல்லாம் சொல்லக்கூடாதுன்னு.. அதுங்க காதுல விழுந்தா வந்துடும்னு!" ஷ் இப்ப நினைச்சாலும் கண்ண கட்டுது. நம்ம weakness மட்டும் யார்கிட்டயும் காட்டிக்கவே கூடாது!

                                

அப்பெல்லாம், எங்கள பாத்துக்கிட்ட அந்தம்மா, "என்னதான் Fan காத்து இருந்தாலும், அந்த வேப்ப மர காத்து சுகமே தனின்னு" ஜன்னல சாத்திட்டு படுக்க Allow பண்ண மாட்டாங்க!

நாம பயந்து கொஞ்சம் ஆர்ப்பாட்டம் பண்ண, ஐயாகிட்ட போட்டு கொடுத்துடும் அந்த அம்மா. வேற வழி இல்லை. அப்ப படுத்துக்கிட்டு அந்த வேப்ப மரத்த லேசா ஒர கண்ணால பாக்கறப்ப! அட ஆண்டவா!" ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு, அதுவாவும், ஒவ்வொரு இதுவாவும் தெரியும் பாருங்க.. அட அட..கண்ண இறுக்கி மூடிகிட்டு கட்டில்லிருந்து இறங்கி, கட்டிலுக்கு கீழ படுத்துக்குவேன்! ஷ் அப்பாடா!


ராத்திரில, எது வெடிச்சாலும் வெடிக்கட்டும்னு 'அதுக்கெல்லாம்' போறதே இல்ல. அப்படியே வந்தாலும், வளர்த்த அந்த அம்மாவ கூப்பிட்டா திட்டிக்கிட்டே வரும், அதுக்கு பயந்துகிட்டு, அக்காவ துணைக்கு கூப்பிட்டா மனுசி சாமானியமா எழுந்திருக்க மாட்டாங்க. அக்காவ எப்படியாவது கூப்பிட்டு போவேன். (வீட்டுக்குள்ளேதான், 2  room தாண்டி போகணும் அவ்ளோ தான்!)

ஒரு நாள் அப்படிதான் மார்கழி மாதம், நான் போயிட்டு வர, குளிருக்கு, அக்கா, போர்வையா முக்காடா போத்திக்கிட்டு, உக்காந்துகிட்டே தூங்கிகிட்டு இருக்க, அத பாத்து நான் கத்த, நான் கத்துரத பார்த்து அவங்க கத்த, ஒரே கூத்துதான், அப்பத்தான் தெரியும், அவுகளுக்கும், அதே பயம் இருந்ததும், மனுசி சும்மா நடுச்சுக்கிட்டு இருந்திருக்காங்கன்னு. செம கூத்து! ஐயாகிட்ட நல்ல பாட்டு வாங்கினோம். ஹிம்

என்னை நீ!
பார்த்ததும் இல்லை!
என்னை நீ!
நினைத்ததும் இல்லை!
ஆனால்
பார்க்காமலே..
நினைக்காமலே..
ஆட்டிவைக்கிராயே! என்ன?
பூர்வ ஜென்மத்து பந்தமோ!

ஷ்.. நம்ம கவிதை எழுதலன்ன யாரு எழுதுவாக 'அதுகளுக்காக' பாவம்!

எங்க போனாலும், இருட்டுறதுக்குள்ள வந்துடறது, அப்படி எப்பயாச்சும் இருட்டிடுச்சுன்னா, முடிஞ்சது கதை..ஓட ஓட தூரமும் குறையாது! வீடும் வாராது! கதைதான்! நான் சைக்கிள் ஒட்டி வர்றப்ப, என் சைக்கிள் பின்னாடி யாரோ பிடிச்சு இழுக்கிற மாதிரியே இருக்கும். சைக்கிள் இருக்கிற இடத்திலே ஓட்டுற மாதிரி இருக்கும்..கடவுளே! கடவுளே. என்ன பொழப்புடா சாமி!

இப்பகூட பாருங்க எந்த பிசாசு இத படிச்சுட்டு இருக்கோன்னு..பக் பக்ன்னு இருக்கு!  (ஹிஹி)

உங்க பிள்ளைங்ககிட்ட தப்பி தவிர அத சொல்லி வைச்சுடாதீங்க! அவங்க உள் மனசுல ஓரத்துல ஆழமா பதிஞ்சுடும், தனிய போக வர பயப்புடுவாங்க! கஷ்டம்! குழந்தைங்கள பயம் மட்டும் ஆட்கொண்டால், அவர்கள் in-secured ஆகத்தான் feel பண்ணுவார்கள்.

உங்கள் பிள்ளைங்ககிட்ட தெளிவா சொல்லிடுங்க அப்படி எதுவும் இல்லைன்னு. ஏன்னா அங்க இங்க, பயபுள்ளங்க ஏதாவது சொல்லி அப்புறமா நாம எடுத்து சொல்லி..தெளியவச்சு..ஷ்ஷ்..முடியாதுங்க. அவ்ளோதான் சொல்லிட்டேன்!

நம்ம பிள்ளைங்க, எந்தவித பயமோ, தயக்கமோ இல்லாமல் வீர நடை போடணும் இல்ல!




(Image Courtesy: Web)

உயர்நிலை கல்வி!


ஆமாம் K.H.S.S-ல் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதும், அங்கு
எந்த Subject -லயும்(கணிதம் தவிர) 75% மேல் என்னால் மார்க் வாங்கவே முடியவில்லை, முதல் ரேங்க் என்பது கனவாகி போனது.  Group Leaderஆக மட்டும் தான் இருந்தேன்! Class Leader ஆக முடியவில்லை! ஏனென்றால், நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்த School- ன் Standard வேற, இந்த School Standard வேற. எல்லா பள்ளிகளிலும் இருந்து இங்கு நுழைவு தேர்வில் வெற்றிபெற்றவர்கள், திறமைசாலிகள்! எல்லாரும் போட்டி போடும் பொழுது நான் Average Student தான்! என்று உணர்ந்தபொழுது வலிக்கதான் செய்தது!

அப்புறம் எவ்ளவோ நல்ல கஷ்டபட்டு படிச்சும்,  முதல் மூணு ரேங்க் கூட வாங்க முடியல!  அது தான் ஏன்னு தெரியல! நாளடைவிலே அதே பழகி போய், என்னோட Range அதுதான்னு mind set ஆயிடுச்சு போங்க. நம்ம Eductaion System என்னன்னு சொல்றது? அந்த சூலழல்ல, எனக்கு நிறைய பக்குவம், நிதானம் வந்துடுச்சு!

"There is a time to lead and a time to follow"  ன்னு மனச தேத்திக்கிட்டேன். இத நீங்க யாராச்சும் தப்பா புரிஞ்சுக்கிட்டு போட்டு கொடுத்துடாதீங்கப்பா, அப்புறம் என்னோட BLOG - க்கு தடை விதிச்சுற போராக! கைப்புள்ள இப்பதான் 4 வார்த்தை எழுத பழகுறேன். என்னோட திறமையா(??) பார்த்து யாராச்சும் பத்திரிக்கைக்கு எழுத கூப்பிடுவாங்க அப்படின்னு..என்ன?தலையில அடிச்சுகுறீங்களா? இதுக்கெல்லாம் பின்னாடி  நீங்க ரொம்ப feel பண்ணுவீங்க பாருங்க.

சரி விசயத்துக்கு வரேன்,
நல்லா படிக்கற பிள்ளைங்க, சில நேரம், ஒரு வேலை சுமாரா எழுதி இருந்தாகூட, அவங்க மேல இருக்கிற Confident-ல நல்ல படிக்கிற பிள்ளைன்னு சரியா பதிலா சரிபார்த்தார்களா? என தோணும். மார்க் குறைச்சு போட மாட்டாங்க. நல்ல மார்க் தான்  போடுவாங்க. "என் சகோதரி, ஆசிரியை Cross check செய்தேன், ஆமாம் என ஒத்துகொண்டார்! அவர்கள் நல்லா படிக்கும் பிள்ளைகள், அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் 4 மார்க் போடும் இடத்தில 5 மதிப்பெண் போடுவோம் என்றார்கள்". நம்ம எப்பவும் open Statement தான் எப்பவும், ஒளிவு மறைவு கிடையாது! என்னை கேட்டீங்கன்னா, Normal தேர்விற்கே Name System இருக்க கூடாது, Random Number சிஸ்டம் தான் இருக்கணும் அப்பத்தான், இந்த பேர பார்த்து மார்க் போடற கதை எல்லாம் இருக்காது. எப்பவும் முதல் ரேங்க் வாங்குறவங்களே, வாங்கிட்டு இருக்க மாட்டாங்க, எங்கயாவது Politics நடந்தா, அதுவும் இருக்காது. என்னது பள்ளிகளில்Politics என ஆச்சரிய படுறீங்களா? அட போங்கப்பா. குறிப்பட்ட ஜாதி பெயரில், குறிப்பிட்ட சமுகத்தின் பெயரில் நடக்கும் பள்ளிகளில் ஒரு வகையான Politics இருக்கத்தான் செய்கிறது.

உங்க பிள்ளைகள், 100/100, முதல் ரேங்க் வாங்குகிறார்கள் என அவர்களை, தலைகனம் கொள்ள செய்யாதீர்கள்! அனுபவித்த வகையில் சொல்கிறேன், உங்கள் பிள்ளை உங்கள் பள்ளியின் Standard, மற்றும் அவனுடன் படிக்கும் பிள்ளைகளை Compare செய்யும்பொழுது Class topper,  இதை எப்போழுதும் உணர்த்துங்கள்! கற்றது கை மண்ணளவு..கல்லாதது உலகளவு என புரியும்படி சொல்லுங்கள்!


                             

உங்க பிள்ளைங்க தமிழ் மீடியம் படிச்சுட்டு இருக்காங்கன்னா, நீங்க செய்ய வேண்டியது எல்லாம். ஆங்கில தினசரி நாளிதழ் வாங்குங்கள், அவர்களை படிக்க வைத்து, ஐந்து புது வார்த்தை தினம் கண்டுபிடுத்து, Dictionary பார்த்து அர்த்தம் எழுத சொல்லுங்கள். அந்த வார்த்தைகளை வைத்து அமைத்து Sentence எழுதி காட்ட சொல்லுங்கள்!" Vocabulary வளரும். ஒரு வாரம் ஆனதும் அந்த 35 வார்த்தைகளை வைத்து அவர்களை test செய்து பாருங்கள், மீண்டும் மீண்டும்..எனக்கு ஐயா சொன்னதுதான் இதெல்லாம்.. ஆனா முழுசா இதெல்லாம் follow பண்ணல. ஏன்னா அப்பத்தான் எனக்கு படிச்சு Engineer ஆகணும் Doctor ஆகணும்னு எந்த கனவும்..இல்லையே! ஐயாவுக்குத்தானே இருந்துது!

இப்ப இருக்கிற பிள்ளைகள், அதுவும் பெண் பிள்ளைகள் செம சுட்டி, நிறைய கனவு இருக்கிறது! உங்கள் பிள்ளை படிக்கும் பொழுதே, "Spoken english" - உங்கள் வசதிக்கு ஏற்ப தனியாக வகுப்பிற்கு அனுப்புங்கள், அவர்கள் தன்னம்பிக்கை வளரும்.

உங்கள் ஊரில் அந்த மாதிரி வகுப்புகள் இல்லை எனில், அவர்கள் பள்ளியில், பெற்றோர்கள் சார்பாக எடுத்துரைத்து, ஆங்கில வகுப்பிலாவது அனைவரையும், ஆங்கிலத்தில் உரையாட பழக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்! இல்லை உங்களால் சரளமாக உரையாட முடியும் எனில், வீட்டில் அவர்களிடம் குறிப்பிட்ட நேரங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட வேண்டும் என்று பழக்குங்கள்.

அவர்கள்  பின்னாளில், College, Campus Interview என போகும் பொழுது எந்தவித தையக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் வாழ்வில் ஜெயிப்பார்கள்!


நம்ம பிள்ளைகள நல்ல School சேர்த்தோம், நல்லா படிக்கிறார்கள் என்பதோடு மட்டும் நம் கடமை முடியவில்லை. அவர்கள் Globalization சூழலுக்கு சமமான தகுதி பெற்று, எல்லா சூழ் நிலைகளையும் சமாளித்து முன்னேற, நாம்தான் வழி நடத்த வேண்டும்.

உங்கள் உறவினர் பிள்ளை தமிழ் மீடியத்தில் படித்து இன்னைக்கு அமெரிக்காவில் பெரிய பதவியில் இருக்கலாம், அவர் வாழ்ந்த சுழல், அவர் தன்னை செதுக்கிக்கொண்ட விதம் வேற! புரிந்து கொள்ளுங்கள்! நாம தமிழ் மீடியம் படிச்சுதானே முன்னேறுனோம், நம்ம பிள்ளைகளும் அப்படியே வந்துடுவாங்கன்னு தயவு செய்து முடிவு செய்யாதிர்கள். ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற Capacity & Capability பொறுத்துதான், அவர்கள் ஆளுமை திறன் இருக்கும்.

ஆமாங்க, தமிழுக்கு நான் ஒன்னும் எதிராளி இல்லை, தமிழ் மீடியத்துல படிச்சுட்டு,தனியா எந்தவித பயிற்சியும் எடுத்துக்காம பின்னாளில் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இப்பகூட அப்படித்தான். எவ்ளோ நாளைக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே நடிக்கறது! அவ்வ்வ்வ்..

இப்பகூட, ஒரு document ரெடி பண்ணா கூட ஒரு தடவைக்கு நாலு தடவை grammer mistake இருக்கானு பாத்துகிட்டு..அடச்சே! என்ன பொழப்புடா சாமி!
நான் நடிச்சுட்டு இருக்கிற விஷயம் யாருக்கும் தெரியாது..கை பிள்ளைய காமிச்சு கொடுத்துடாதீங்க!

தாத்தா நீங்க இப்ப உயிரோட இருந்தா உங்கள நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கணும், "தாத்தா ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி"? (ஒ! ஐஞ்சு வார்த்தையா போச்சு) என்ன திரும்ப சரியா இருக்கான்னு count பண்றீங்களாக்கும்?

தாத்தா, நீங்க தமிழ் தாத்தாவாகவும், ஆங்கில தாத்தாவாகவும், பிச்சு உதறுணீங்களே?  அது எப்படின்னு சொல்லாமலே போயிட்டீங்களே தாத்தா!

திருக்குறள்:
அதிகாரம்: கல்வி
குறள் 400:

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.


பொருள்:
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

Image Courtesy: Web

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பாலர் பருவமும் & ஆரம்ப கல்வியும்!

சமயத்துல, நம்ம ரத்த பந்தத்தில, இல்ல சொந்தத்தில சில Silent killer இருப்பாங்க அப்படிதான் ஒருத்தர், என் அம்மா வழி தாத்தா, "தமிழ் தாத்தா" அப்படி ஒரு கவிஞர், சினிமாக்கு பாட்டு எழுதி இருக்காரு, நிறைய புத்தகம் போட்டு இருக்காரு! அவரு தமிழ் மேல இருந்த ஆர்வத்திலே, எங்கள எல்லாம் தமிழ் மீடியத்துல தான் படிக்க வைக்கனும்னு உறுதியா சொல்லிட்டாரு.

அதுல கொடுமை என்னன்னா, அவரு சொல்ற எதையுமே காதுல போடாத எங்க ஐயா, இத மட்டும் காது கொடுத்து கேட்டுட்டாக!

அதனால் நாம L.K.G, U.K.G  எல்லாம் படிக்கல நேரடி ஒன்னாம்ப்புதான், அங்கு ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே இருந்தது.

அதுவும் பாத்தீங்கன்ன, ஒன்றாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை Super படிப்பு மச்சி.


ஐந்தாம் வகுப்பில் நான்தான் Class leader,  நல்லா படிக்கிறோம் என தலைகனம் நிறைய. எதற்காகவும் Adjust பண்ண மாட்டேன், எங்கள் School-ல் நடக்கும் "பாலர் சபா" வில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி எல்லாத்துலயும் பரிசு தட்டி செல்வேன்.. அப்பத்தான் School-ல்ல Election வந்துச்சு School People Leader பதவிக்கு. எல்லா Class leader நடக்கிற போட்டி. Class leaders வேட்பாளர்கள்
( உங்களுக்கு தெரியாததா? ) நான்காம், மற்றும் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் வாக்களிக்க(??) உரிமை பெற்றவர்கள்!

அவர்கள் முன்னிலையில், கொடுக்கிற தலைப்பில் 10  நிமிடம் பேசணும்(தலைப்பு அப்பத்தான் தருவாங்க, ஐந்து நிமிடம் தயார் பண்ணிக்க கொடுப்பாங்கா), அதிலிருந்து இருவர் தேர்ந்து எடுத்தார்கள், அதில் நானும், பூமா என்கிற பெண்ணும் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றோம். அப்பொழுதும் 10  நிமிட பேச்சு, என் பேச்சுக்கு கிட்டத்தட்ட மழை மாதிரி எனக்கு கை தட்டல்!

 ரெண்டு பேர்ல யாரு செலக்ட் பண்றீங்க, நாங்க பேர சொன்னதும் கை தூக்கணும்! பேப்பர் இல்லை, பெட்டி இல்லை, பைசா செலவில்லாத Election- பா!  ஒரே ஆளு ரெண்டு பேருக்கும் கை தூக்கினா எப்படின்னு யோசிக்கிறீங்க தானே? அதான் இல்லை. மொத்த பசங்க, ரெண்டு பேருக்கும் கிடைச்ச ஒட்டு  vary ஆச்சுன்னா, திரும்ப கை தூக்க சொல்வாங்க! ஹிம்

அப்படி கேட்டதும் பய புள்ளைக, எனக்கு கொஞ்ச பேரும், அவளுக்கு நிறைய பேறும் வாக்களித்தார்கள்(?!?)! நான் சிகப்பாக இல்லையே என வருத்தப்பட்ட ஒரே தருணம்..அந்த தருணம். ஏன்னா பூமா மிகவும் சிகப்பாக, அழகாக இருப்பாள்!

என்னதான் திறமை நமக்கு இருந்தாலும், சமையத்துல அழகு அப்படியேஅள்ளிக்கிட்டு ஜெய்ச்சுடுங்க! என்னைய கேட்டாலே அவளுக்குத்தான் ஓட்டு போட்டுருப்பேன்! அழகா இருக்கிறவங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கிறது நியாயம்தானே!

அப்பொழுது, முதல் ரேங்க் தான் வாங்குவேன், தவறிப்போனா ரெண்டாம் ரேங்க். வரலாறு புவியல்ல கூட 100/100 தான். இன்னும் ஞாபகம் இருக்கிறது, ஐந்தாம் வகுப்பில், வரலாறு புவியல் பாடத்தில்  100/100வாங்கி இருந்தேன், என்னைய விட்டே எங்க வரலாறு/புவியல் ஆசிரியை அழைத்து வர சொன்னார் எங்க class teacher. "எப்படி 100/100 போட்டீர்கள் என கேட்டார்? ஆசிரியை, "மதிப்பெண் குறைக்க வாய்ப்பே இல்லை, அப்படி இருக்கிறது ஒவ்வொரு பதிலும்! என சொன்னார்". இப்பதான் பத்து வருசமா 100/100 போடாறாங்க, தமிழும், வரலாறு புவியல் 100/100 என்பது 2000 வருடம் வரை வாய்ப்பே இல்லை!

அதுவும் அந்த ரேங்க், அந்த பெயர் வாங்கிட்ட சான்சே இல்லைங்க. அதுவும் ஒரு போதை தான் இல்லை?, திரும்ப திரும்ப எடுத்துக்குட்டே இருக்கணும்!, பின் தங்கிட்டா கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு Mood out தான். நல்ல விசயத்தில, அதுவும் படிக்கிற விசயத்துல ஒரு போதை இருக்குறது தப்பில்லையே!

                                

ஐந்தாம் வகுப்பு முடிந்து, ஆறாம் வகுப்பிற்கு(தமிழ் மீடியம்), மேல்நிலை பள்ளிக்கு நுழைவு தேர்வு எழுதி, K.H.S.S -ல் தேர்வு பெற்றேன். அங்கே தான் விழுந்தது எனக்கு அடி!  சாதாரண அடி இல்லை! சம்மட்டியால் அடித்த அடி போல்!

திருக்குறள்:
அதிகாரம்: கல்வி
குறள் 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

பொருள்:
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்..

Image Courtesy: Web

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

தந்தையுமானவன்!

பெண் பிள்ளைகளை பெற்ற ..
தகப்பன்கள் பாக்கியசாலிகள்..(தங்க மீன்கள்)
அண்ணணன், தம்பிகளை பெற்ற ..
பெண் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள்..(நான்)

அண்ணா என்று ஒரு மூன்று எழுத்தில்.. என் அண்ணனை அடைக்கி விட முடியாது!

எல்லாருக்கும் அண்ணன், தம்பி இருக்கலாம், ஆனால் அவர்கள் திருமணத்திற்கு  பிறகும், அதே பொறுப்புடன், பாசத்துடன் இருக்கமுடியுமா?
கொஞ்சம் சிரமம் தான், அவர்கள் குடும்பத்தை கவனிக்கணும் அல்லவா?
என் அண்ணன்  எப்பவும், இப்பவும், ஒரே மாதிரி என்னை வழி நடத்துகிறார். அப்படி அண்ணி அமைந்த வகையிலும் நான் பாக்கியம் செய்து இருக்கிறேன்.




தந்தையுமானவன்!

தந்தையை தாயுமானவனாய்
பெற்ற அதிர்ஷ்டசாலி நான்தான்..
சகோதரனை தந்தையுமானவனாய்
பெற்ற பாக்கியசாலியும் நான்தான்..
தந்தையுமானவனே!
வழி நடத்துகிறாய் நீ..என்னை
அன்பு நெறிகொண்டு..
நான் வாழ்வில் முன்னேறுகிறேன்..
வெற்றி நடைகொண்டு..
என் தந்தையுமானவனுக்கு..
என் இனிய...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


                                     

இன்றும் ஞாபகம் இருக்கிறது,
நான் வேலைக்கு போக இருந்த முதல் நாள், அஷ்டமி இன்று சேர வேண்டாம் என்று சொன்னாய், பிறகு ஒரு நல்ல நாளில் வேலைக்கு சென்றேன்..இதோ வருடங்கள் ஓடிவிட்டன..அதே கம்பெனி, நல்ல பெயர்..நல்ல வேலை..எல்லாம் உன் ஆசிர்வாதமும்..வழி நடத்தலும் தான்..இன்று நான் Award வாங்கும் வரை கொண்டு சென்று இருக்கிறது..
இதோ உன் பிறந்த நாள் அன்று ..
இந்த Award உனக்கு அர்ப்பணிக்கிறேன்.
இதைவிட Costly-யா உனக்கு வேற ஏதும் GIFT தேவை இல்லைதானே! (ஹி ஹி..)


திருக்குறள் 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.


புதன், 20 ஆகஸ்ட், 2014

நட்பு -2!

சாந்தி.. என்ன வாந்த..போந்த..(வாப்பா, போப்பா மாதிரி தஞ்சை வழக்கு பேச்சு) என கூப்பிடுவாள். தஞ்சை வழக்கு பேச்சு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணும்னா "களவாணி" படம் பாருங்கள். பேச்சு வழக்கு, சொந்தம், பந்தம் எல்லாம் அச்சு, அசலா காமிச்சு இருப்பாரு இயக்குனர். சற்குணம். (Thank you Boss) சொந்த மண் வாசனையில இப்படி ஒரு படம் நான் பாக்கல.

அதுல வர்ற அம்மா சரண்யா மாதிரிதான், எங்க ஊரு அம்மாக்கள் பிள்ளைகளை Support  பண்ணுவார்கள் (எல்லா அம்மாவும் அப்படிதான்..ஆனா அந்த ஜோசியம்..அந்த டயலாக். சொல்றேன்) அதாங்க "ஆடி போயி ..ஆவணி வந்தா அவன் டாப்பா வந்துடுவான்னு ..ஜோசியர் சொல்லி இருக்காருன்னு" அதே போலதான்.

போன வாரம்..இந்த டயலாக் mock பண்ண ஒரு ஜோக் படிச்சேன்.."இந்தியா தெரியாம..ஆடியில சுதந்திரம் வாங்கிடுச்சு..ஆவணியில வாங்கி இருந்தா..இன்னும் டாப்பா வந்து இருக்கும்.." ன்னு..பய புள்ளைங்க என்னமா யோசிக்குதுங்க..ஹிம்

இந்த மாதிரி ஜோசியத்த வச்சே அம்மாக்கள், பிள்ளைகளை காப்பாற்றுவார்கள்!!

உதாரணமா, பையன் சரியா படிக்கலன்னு வச்சுக்கங்க, அப்ப அப்பா திட்டுனாலோ, அடிச்சாலோ, உடனே அந்த அம்மா சொல்வாங்க .."இப்பதாங்க ----- ஜோசியர பார்த்தேன்..அவரு சொன்னாரு..ரெண்டாம் வீட்ல(எந்த வீடுன்னு சரியா தெரியல கொஞ்சம் Adjust பண்ணிக்கோங்க) சந்திரன் மறைஞ்சி இருக்கிறதால..மதி மங்கி போகும்..கொஞ்ச நாள்ல சரியா படிக்க ஆரம்பிச்சுடுவான்னு"

இதே கேட்டு சராசரி அப்பான்னா, சும்மா விட்டுடுவாரு. அதே "தண்ணி" அடிச்சுட்டு, தகராறு பன்றவருன்ன்னு வைங்களேன் " ஒன்னு, ரெண்டு ..ஒன்னு ரெண்டு(Repeattu) ..நம்ம வீட்லேந்து ரெண்டாவது வீட்ல.அம்மன் கோவில் பூசாரி கந்தசாமி தானே இருக்காரு..அது யாருடி சந்திரன்?..அவர் வீட்ல மறைஞ்சுகிட்டு..என் பிள்ளைய படிக்க விடாம பண்றவான்" .."எவனா இருந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி நேர வர சொல்லு நான் பாத்துகறேன்னு" ஒரே ரகளை நடக்கும்...அப்புறம் அந்தம்மா தலையில அடிச்சுக்குட்டு போயிடும்.(எல்லாம் கற்பனைதாங்க..)

அம்மாவுக்கும், பையனுக்கும் உள்ள புரிதல் இருக்கு பாருங்க சான்சே இல்லை.

அம்மான்னா அம்மாதான்..!!! (பாத்தது..படித்து ..கேட்டது மட்டும்..)



இங்க பாருங்க..topic மாற்றி எங்கோயோ போயிட்டேன்..ஆங்..சாந்தி விசயத்துக்கு வரேன்..

ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். ஒன்றாகவே School போயிட்டு, ஒன்றாகவே வருவோம்!

பதினோறாம் வகுப்பு நான் வேற School..அவ வேற School ..இருந்தாலும் சனி, ஞாயிறு சந்திப்போம் , ஒன்றாகவே கோயிலுக்கு போவோம். அப்ப எனக்கு எங்க ஐயா Cycle வாங்கி கொடுத்து இருந்தாங்க!".  சாந்திக்கு Cycle ஓட்ட தெரியாது..அதனால எப்பவும் நான் doubles அடிப்பேன்.

சாந்தியுடன் கூட பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அவளுக்கு இளைய அண்ணன் "சின்னா" அண்ணன், அவர பத்தி சொல்லி ஆகணும்.மற்ற அண்ணன்கள் திருமணம் ஆகிவிட, சின்ன வயதிலே தந்தையை இழந்தவள் என்பதால், சாந்தி மேல ரொம்ப பாசமா இருப்பாரு "சின்னா" அண்ணன்.

உதாரணமா சொல்லனும்னா, தஞ்சையில் அவ்ளோ dress variety இருக்காதுன்னு, சென்னை போய், வாங்கி வருவாரு" அப்படி வாங்கி கொடுத்தாதான் பாசம்னு நான் சொல்லல. அவர் அவ்ளோ செய்ததும், அவரது அர்பணிப்பும் என்ன ஆனது என படிக்கும் பொழுது தெரிந்து கொள்வீர்கள்!.

 "சின்னா" அண்ணன், சாந்திக்கிட்ட, "சைக்கிள் ஓட்ட கத்துக்கோ, சைக்கிள் வாங்கி தரேன்னு" சொல்லல.புது சைக்கிள் வாங்கி கொடுத்து, என்னிடம் கத்துக்க சொன்னார்! என் சைக்கிள் வச்சு கத்து கொடுத்தா..சைக்கிள் கீழ விழும்..சைக்கிள் அடி படும்னு சொன்னார்" அதான் புதுசா வாங்கிட்டேன் சொன்னாரு.."அப்ப.. சாந்தி புது சைக்கிள் விழுந்தா பரவாயில்லையான்னு கேட்டேன்"..சிரிச்சாங்க. "அவங்க அவங்களுக்கு, அவங்க things மேல ஒரு ப்ரியம் இருக்கும்மா" அப்படின்னு சொன்னார்!

சாந்தி, என்கிட்டே சொன்னா, "சைக்கிள் கத்து கொடு..ஆனா என் புது சைக்கிள் கீழ விழ கூடாது betன்னு" ஷ்ஷ் ..தெரியாம OK சொல்லிட்டேன்ங்க..சனி ஞாயுறு தானே meet பண்ணுவோம்..1 hr training..

அன்னைக்கு, அப்படிதான்..சைக்கிள் ஒட்டி கிட்டே...மறந்த மாதிரி காமராஜ் ரோட்டுக்கு வந்துட்டோம்! "அய்யயோ...சாந்தி..அவன் வந்துட போறேன்னு!" சொல்லி முடிக்கறதுக்குள் அவன் வந்துட்டான்!
?

?
அப்படியே உங்க கற்பனை வேற எங்காச்சும் போயுருக்குமே? தெரியுமே உங்கள பத்தி..

அவன் வேற யாரும் இல்லை..காமராஜ் ரோட்டுல இருக்கிற தெரு நாய்..அதுக்கு Two wheeler-ல போறவங்கள கண்டாலே என்ன ஆகுமோ தெரியாது...குறைச்சுகிட்டே பல்ல காட்டிட்டு துரத்திட்டு வரும்..கிட்ட தட்ட சைக்கிள் pedal கிட்ட வந்துடும்..பசங்கன்னா...கால தூக்கி, சைக்கிள் முன்னாடி wheel மேல வச்சுப்பாங்க! பெண்ணா பிறந்துட்டோமேன்னு ..கண்ட ..கண்ட நாயெல்லாம் நினைக்க ..வைக்கும் பாருங்க!  அடச்சே! இதுக்காகவே ஒரு தெரு..சுத்தி போவேன்..சாந்திக்கும் தெரியும்!

அவன் "அவ்வவ் அவ்வ்ன்னு" குறைச்சு கிட்டே!..கவ்வ வர..
என் கவனம் சிதற..
சாந்தி Balance விட..
அவ தொப்புன்னு கீழ விழ..
அப்பாடா!..சைக்கிள் மட்டும்..என் பிடியில..

"அதுக்குள்ளே..வேற ஒரு வண்டி வர..அவன் அவங்கள துரத்திட்டு போயிட்டான்!"

சாந்திக்கு நல்ல அடி..அவளுக்கு அழுகை வந்துச்சு..என்ன பாத்து கேட்டா.."பாவி..சைக்கிள இப்படி பிடுச்சுக்கிட்டு என்னைய விட்டுட்டுயே!"ன்னு. நான் சீரியஸா முகத்த வச்சுகிட்டு  சொன்னேன்.."Bet என்னன்னா சைக்கிள் கீழ விழகூடாதுன்னுதான்..நீ விழ கூடாதுன்னு இல்லை" அப்படின்னு..வலிய மறந்து..அப்படி சிரிச்சா!

அவளுக்கு, சைக்கிள் ஓட்டும் பொழுது, எதிரே எந்த 4 wheeler -ம்வந்துட கூடாது..தொப்புன்னு குதிச்சுடுவா.இந்த லச்சனத்துல ஒட்டுனா..நடக்கிற காரியமா?

சொன்னா நம்ப மாட்டீங்க..சைக்கிள ஓட்ட கத்துக்க.. 6 மாசம் எடுத்துகிட்டா..படுபாவி" நானும் அசரலேயே!..என்னோட training ..அவ்ளோ மோசமான்னு என்னைய தப்பால்லாம் நினைச்சுடாதீங்க! அவள் அப்படிதான்! அப்படி ஒரு நிதானம்!
                                        
அந்த சைக்கிள, அவள வச்சு  balance பண்ணேன் பாருங்க..அந்த experience..வாழ்க்கையிலே எந்த நிலையிலும் நான் balance விடறதே இல்லை..ஹிம்ம் ..இதெல்லாம் படிக்கணும்னு உங்க தலை எழுத்து.

இவ்ளோ பொறுமையா இருக்கிற நான் என்னோட 10 வயதில் எப்படி இருந்தவள் உங்களுக்கு தெரியுமா?  எல்லாத்துலயும் ஒரு flash back இருந்தா சுவாரஷ்யம் தானே!  என்னோட பாலர் பருவம் படிங்கப்பு!

கதையில ஒரு Twist--ஆன்னு கேக்குறீங்கள?
அப்படியெல்லாம் இல்லைங்க..என்னோட வாழ்வின்  சில நிகழ்வுகளில் இருந்து , சில கருத்துக்களை முன் வைக்கலாம்னு தான்! என்ன தையிரியத்துல உன் இஷ்டத்துக்கு உன் கதைய எழுதுறே.. இதெல்லாம் நாங்க படிக்கணுமான்னு கேக்குறீங்களா? வேற வழி இல்லை அப்பு!

நிஜமா சொல்லனும்னா, இப்ப என்னோட பதிவு உங்களுக்கு பிடிக்கலன்னா கூட உங்களால கிழிக்க முடியாதுல்ல, அந்த தைரியம்தான் சாமி வேற ஒன்னும் இல்லை.

திருக்குறள்
குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

விளக்கம்:
நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

(Image courtesy:web)

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

நட்பு -1!



ஏழாம் வகுப்பில்(தஞ்சை  K.H.S.School)  அறிமுகம், அமைதிக்கு மறு பெயர் அவள் பெயர். சாந்தி!

இன்றும் ஞாபகம் இருக்கிறது, ஒரு நாள் விளையாட்டு நேரத்தில், volley ball விளையாட ஆள் கிடைக்காமல் என்னை அழைத்தாள்.

மெதுவாக பேச ஆரம்பிக்க, அவள் சிறு வயதில் தந்தையை இழந்து விட்டதை சொல்லி வருத்தப்பட்டாள். அப்பாவை பார்த்ததில்லை என்றாள். நான் அம்மாவை பார்த்ததில்லை. இது போதாதா? நாங்கள் தோழிகள் ஆனோம்.

சாந்தி கொஞ்சம் moody type அதனால், அவளுக்கு அதிகம் friends இல்லை. எனக்கு இரண்டு, முன்று நண்பிகள் இருந்தார்கள்.

அதில் ஒருவள்,  ஒரு நாள் இன்னொருத்தியின் Water bottle(Fridge - ல், தண்ணி ஊற்றி வைக்கும் plastic bottle ) வாங்கி தண்ணி குடிக்கும் பொழுது, கீழே போட்டு உடைத்து விட்டாள்.

bottle  "உடைத்தது" தெரிந்தால் அம்மா திட்டுவார்கள், என சொந்தக்காரி அழ..
bottle உடைச்சுட்டேன் தெரிஞ்சா, எங்க அப்பா என்ன கொன்னுடுவாருன்னு உடைத்தவள் அழ,

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஒரே யோசனை, உங்க அம்மாகிட்ட, தெரியாம உடைசுட்டோம்னு, நாங்க எல்லாம் வந்து சொல்லிடறோம், என சமாதானபடுத்தி அவள் வீட்டுக்கு போனோம். அவங்க அம்மா (ரொம்ப நல்லவங்க!?!)  எங்கள பார்த்து சொன்னங்க "என் பொண்ணு யாரோட bottle-யும் உடைச்சு இருந்தா, நான் புது பாட்டில் வாங்கி கொடுத்து அனுப்புவேன்னு பட்டுன்னு, முஞ்சில அடிக்காம, ஆனா, அடிச்சு சொல்லிட்டாங்கன்னா பாருங்களேன்.

நாங்க திரு திருன்னு முழிச்சுட்டு வீடு திரும்பினோம். வரும் வழியில், "என்னதான் இருந்தாலும், அவ அம்மா அப்படி கேட்டு இருக்க கூடாதுன்னு" ஒருத்தி சொல்ல..இல்ல "
அது தான் சரி" அப்பொழுது தான் நாம அடுத்தவங்க பொருள வாங்கினா கவனமா திருப்பி கொடுக்கணும்னு ஒரு பொறுப்பு இருக்கும்" அப்படி நினைச்சு கேட்டு இருப்பாங்கன்னு நாங்களே சமாதானம் படுத்திகிட்டோம்.

மறு நாள் பிளான் போட்டோம்,  எல்லாரிடம் உள்ள கை காசு(தலைக்கு இரண்டு ரூபா கூட தேறல..ஹி ஹி) போட்டு எட்டு ரூபாய்க்கு பாட்டில் வாங்கிடலாம்னு பேசி முடிவு பண்ணி. சாந்தியிடம் அவள் கைகாசு கேட்டேன். அவ என்னடான்னா..
"நான் என்ன ஒரு வாய் தண்ணி குடிச்சேனா? "
"இல்லை பாட்டில் உடைச்சதுக்கும் எனக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?."
"நான் ஏன் கொடுக்கவேணும் காசு?"
அப்படி, இப்படின்னு..கட்டபொம்மன்கிட்ட வரி கேட்ட கதையா என்ன பார்த்து கேள்விமேல் கேள்வி கேட்டா,

அவ உன் friend, நான் உனக்காக கூட வந்தேன்னு", வேணும்னா, ஐம்பது பைசா தரேன்னு, பெரிய மனசோட கொடுத்தா." அவளோட நேர்மை எனக்கு பிடித்து இருந்தது (??!!).

நீங்களே சொல்லுங்க, bottle -ல் உடைச்சவ ஒருத்தி, அப்பாவியா, நான் திட்டு வாங்கினேன். இப்பவும் அப்படிதாங்க..இப்படி எல்லார் கிட்டயும் அடிவாங்குரதால...என்ன ரொம்ம்ப நல்லவன்னு நினைச்சுராதீங்க.(சும்மா ஒரு பேச்சு சொன்னேன்ப்பா...)

அப்புறம் ஒரு வழியா தேத்தி, ஒரு புது bottle வாங்கி கொடுத்து அனுப்பினோம்.

உடைச்சவ முகத்தை பாக்கணுமே, அழுதுகிட்டே, அப்படியே சிரிச்சது.,இப்ப நினைத்தால் .அப்படியே கடலோர கவிதை ரேகாவ நாபகபடுத்துற மாதிரி இருக்கிறது.(அந்த seen தெரியுமே உங்களுக்கு!  கொடியிலே மல்லிகை பூ பாடல்ல, சத்தியராஜ் கடல்ல காண போன மாதிரி வரும், அதுக்கு அந்த அம்மா ரேகா ஒரு அழுகை அழுது, அப்புறம், சத்தியராஜ் பெரிய மீனோட அந்த அம்மா பக்கத்துல வந்து நிப்பாரே, அப்ப சிரிக்குமே அதே தான்)

அந்த பாட்ட பாக்கணும்னு தோணுச்சுன்ன இங்கே  கிளிக் பண்ணவும்.(seen 2.25 - 4.05)

அவ சந்தோசத்த பார்த்தப்ப, அதைவிட அன்னைக்கு பெரிய சந்தோசம் வேற எதுவும் இல்லை.

சந்தோஷத்திலேயே பெரிய சந்தோசம் அடுத்தவங்கள சந்தோஷ படுத்தி பாக்கறது தானே!
                                 

பிரச்சனை முடிஞ்சுதுன்னு தானே நினைச்சிங்க, அதான் இல்லை..

உடைத்தவள், எல்லாம் settle ஆனதும், சாவகாசம, அவுக அம்மாக்கிட்ட சொல்லி இருக்கு,  அந்த பொண்ணு வந்து எங்க கிட்ட, "அம்மா  உங்க எல்லாரையும் வீட்டுக்கு வர சொன்னாங்கன்னு", உங்கள என் அம்மா பாக்கணும்னு சொன்னாங்க.."வரலன்ன School-க்கு வரேன்னு சொன்னாங்கன்னு"  சொல்லுச்சு..அப்படியே பக்குன்னு ஆச்சு எங்களுக்கு!அன்னைக்கு அவளுக்கு நாங்க கொடுத்த dose இருக்கே ..sema dose.எல்லாதையும் அமைதியா வாங்கிகிடுச்சு!

பய புள்ளைக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம், பண்ணதெல்லாம் பண்ணிட்டு அம்மாக்கிட்ட போட்டு கொடுத்துட்டாளே! அவுங்க School வருவதுக்குள்..நாம போயுடனுமே..அப்படியே School முடிஞ்சதும் அவ வீட்டுக்கு போனோம். ரொம்ப தூரம் எல்லாம் இல்ல..எல்லார் வீடும்.. 2 தெரு முதல்  5 தெருக்குள்ள தான் இருந்தது. அப்பொழுது நாங்கள் வாசித்த ஸ்ரீநீவாசபுரம், நட்பும் நட்பு சார்ந்த இடமாக இருந்தது..அவ்வளவு ஆட்டம்!!

அவங்க அம்மா ..வாசலுக்குள் நுழையும்போதே "வாங்கம்மா வாங்க.. பெரிய மனுசிகளா" அப்படின்னு கூப்பிட்டாங்க!"  செமத்தியா வாங்கபோரோம்னு நினைக்கிற மாதிரியே இருந்துச்சு அவங்க அழைப்பு. அவங்க முகத்தில சிரிப்பு இருக்கான்னு பாத்தோம் இம்கும்..சுத்தமா இல்லை.

அந்த மாதிரி சமயத்துல பாருங்க."ஒருத்தர  ஒருத்தர் முன்னாடி அனுப்பி
(இளிச்ச வாய முன்னாடி தள்ளிவிட்டு)  யார் பின்னால ஒளிஞ்சுக்க்கலாம்னு தானே பாப்போம். எவ்ளோதான் இடம் இருந்தாலும்..வரிசையில தான் போவோம். எவ்ளோ தான் நடந்தாலும் இருந்த இடத்துலேயே நடந்துக்கிட்டு இருப்போம் பாருங்க..அட அட..இன்னைக்கு நினச்சாலும் சிரிப்பு வருது போங்க.கடைசியில தள்ளிவிட்டு, முன்னாடி நின்ன அந்த ஏமாளி.. நான்தான் வேற யாரு(ஹிம்)!

எப்பவும் ஆஞ்சநேயர தான் துணைக்கு அழைப்பேன். தைரியம் கொஞ்சம் வந்துடும்..ஆனா அன்னைக்கு அவங்க அம்மா முகத்த பாத்தப்ப கொஞ்சம் basement ஆடத்தான் செஞ்சது.

"எல்லாரும் தனி தனியா நில்லுங்க, உங்க முகத்தை பாக்கணுமேன்னு"  சொன்னங்க. பய புள்ள ஒண்ணு ஒண்ணா பக்கத்துல வந்து நின்னுச்சு,(ஷ்ஷ் அப்பாட..கொஞ்சம் தெம்பா இருந்துச்சு).

"உங்கள்ள யாரு..புது bottle வாங்கி நீங்களே கொடுத்துடலாம்னு முடிவு பண்ணது?" ன்னு முதல் கேள்விய போட்டாங்க பாருங்க"  பயபுள்ள எல்லாரும் என்னைய கை காட்டுச்சுங்க! (எவ்வளவு பாசம்?! )

என்னைய பாத்து கேட்டாங்க "இன்னைக்கு அவ பானைய உடைச்சா...வாங்கி கொடுத்துட்டீங்க (mind voice-"இல்ல..அவ bottle தானே உடைச்சா!")" நாளைக்கு யானைய உடைச்சா வாங்கி தந்துடுவீங்களா? (mind voice - ஒரு ரைமிங் வேணும்தான் அதுக்காக இப்படியா கேப்பீங்க! )

அந்தமாதிரி சமயத்துல, முகத்த எப்படி வச்சுக்கணும்னு, எங்கிட்ட ஒரு format இருந்தது.

1 . நார்மலா இமை துடிக்கரதுக்கு பதிலா..அடிக்கடி இமைக்கணும்
2.  கைய கட்டிக்கணும் (லேசா)( Attention, stand at ease la பின்னாடி கை கை வைச்சுப்போமே, அதே மாதிரி முன்னாடி வச்சுக்கணும்)
3.  பயம் கொஞ்சமா இருந்தாலும், இல்லைன்னாலும்..பாக்கறதுக்கு நாம ரொம்ப பயப்படற மாதிரி  இருக்கணும்!

அவ்ளோதான்

அதை அப்படியே execute பண்ணேன்.

நான் அவங்கள பாத்து "அம்மா.. அப்படியெல்லாம் அவ உடைக்க மாட்டா..பாட்டில் கீழ விழுந்ததால தான் உடைஞ்சு போச்சுன்னு" ரொம்ப அப்பாவியா சொன்னேன். சிரிச்சுட்டாங்க. அப்பாடி!

அம்மான்னு கூப்பிட்டது ice வைக்க எல்லாம் இல்லை..என் friends அம்மா அப்பாவை,நானும் அம்மா அப்பா என்று அழைப்பது வழக்கம்(என்னை பற்றி தெரியாதவர்களுக்கு!)

அவ அம்மா எங்கள பாத்து,
"நீங்க உங்க friend-க்காக, அந்த அம்மாகிட்ட போய் excuse கேட்ட வரைக்கும் OK." "ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா, நீங்களே தீக்கணும்னு நினைக்க கூடாது. வீட்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லனும்னு Advise பண்ணாங்க"  நாங்க mind-ல note பண்ணிகிட்டோம்.

இனிமே அவ எதாச்சும் பண்ணிட்டு பயந்தா கூட எங்கிட்ட வந்து சொல்லுங்கன்னு சொன்னாங்க" நிறைய sweets கொடுத்தாங்க. ஆளுக்கு ஒரு cover கொடுத்தார்கள், அதுல sticker bindi, clip, bangles , நிறைய fancy items"

தலைக்கு ரெண்டு ரூபா  bottle வாங்க போட்டோம்..திரும்ப கிடைச்சது பத்து ரூபாய்க்கு மேல! சூப்பர் இல்ல! ரொம்ப Happy-யா வீட்டுக்கு போனோம்!

bottle உடைத்தவளும், அவங்க அம்மாவும் தான் Shopping போய், எங்களுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி இருக்காங்க..அவ Surprise பண்ண நினைச்சாளாம்!

வீட்டுக்கு போனதும், gift யார் கொடுத்தான்னு எல்லார் வீட்லயும் கேட்டு..நாங்க பானை வாங்கின கதைய சொல்லி..sorry..sorry ..bottle..வாங்கின கதை சொல்லி.. அப்புறம் தனி தனியா அவுக.. அவுக வீட்ல வாங்கி கட்டி கொண்டது ..ஹிம் அதெல்லாம் சொன்னா..இந்த பதிவு தாங்காது!

Bottle உடைச்சவ Delhi- ல settle ஆயிட்டா. Bottle owner எங்க இருக்கான்னு தெரியல..ஹிம்

மக ராசி ..நீ இத படிக்க நேர்ந்தால், உன் Contact details கொடுத்துட்டு போ, அப்படியே உங்க அம்மாவை ரொம்ப கேட்டேன்னு சொல்லு.

சாந்தி எங்கேன்னு? கேக்குறீங்களா? அதுக்கு நீங்க இன்னும் மூணு, நாலு episode(?) காத்து இருக்கணுமே! அவள ஒரு அத்தியாத்தில் அடக்கி விட முடியாது..ராட்சசி..அன்பான ராட்சசி!


குறள் 789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

விளக்கம் 
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்