புதன், 20 ஆகஸ்ட், 2014

நட்பு -2!

சாந்தி.. என்ன வாந்த..போந்த..(வாப்பா, போப்பா மாதிரி தஞ்சை வழக்கு பேச்சு) என கூப்பிடுவாள். தஞ்சை வழக்கு பேச்சு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணும்னா "களவாணி" படம் பாருங்கள். பேச்சு வழக்கு, சொந்தம், பந்தம் எல்லாம் அச்சு, அசலா காமிச்சு இருப்பாரு இயக்குனர். சற்குணம். (Thank you Boss) சொந்த மண் வாசனையில இப்படி ஒரு படம் நான் பாக்கல.

அதுல வர்ற அம்மா சரண்யா மாதிரிதான், எங்க ஊரு அம்மாக்கள் பிள்ளைகளை Support  பண்ணுவார்கள் (எல்லா அம்மாவும் அப்படிதான்..ஆனா அந்த ஜோசியம்..அந்த டயலாக். சொல்றேன்) அதாங்க "ஆடி போயி ..ஆவணி வந்தா அவன் டாப்பா வந்துடுவான்னு ..ஜோசியர் சொல்லி இருக்காருன்னு" அதே போலதான்.

போன வாரம்..இந்த டயலாக் mock பண்ண ஒரு ஜோக் படிச்சேன்.."இந்தியா தெரியாம..ஆடியில சுதந்திரம் வாங்கிடுச்சு..ஆவணியில வாங்கி இருந்தா..இன்னும் டாப்பா வந்து இருக்கும்.." ன்னு..பய புள்ளைங்க என்னமா யோசிக்குதுங்க..ஹிம்

இந்த மாதிரி ஜோசியத்த வச்சே அம்மாக்கள், பிள்ளைகளை காப்பாற்றுவார்கள்!!

உதாரணமா, பையன் சரியா படிக்கலன்னு வச்சுக்கங்க, அப்ப அப்பா திட்டுனாலோ, அடிச்சாலோ, உடனே அந்த அம்மா சொல்வாங்க .."இப்பதாங்க ----- ஜோசியர பார்த்தேன்..அவரு சொன்னாரு..ரெண்டாம் வீட்ல(எந்த வீடுன்னு சரியா தெரியல கொஞ்சம் Adjust பண்ணிக்கோங்க) சந்திரன் மறைஞ்சி இருக்கிறதால..மதி மங்கி போகும்..கொஞ்ச நாள்ல சரியா படிக்க ஆரம்பிச்சுடுவான்னு"

இதே கேட்டு சராசரி அப்பான்னா, சும்மா விட்டுடுவாரு. அதே "தண்ணி" அடிச்சுட்டு, தகராறு பன்றவருன்ன்னு வைங்களேன் " ஒன்னு, ரெண்டு ..ஒன்னு ரெண்டு(Repeattu) ..நம்ம வீட்லேந்து ரெண்டாவது வீட்ல.அம்மன் கோவில் பூசாரி கந்தசாமி தானே இருக்காரு..அது யாருடி சந்திரன்?..அவர் வீட்ல மறைஞ்சுகிட்டு..என் பிள்ளைய படிக்க விடாம பண்றவான்" .."எவனா இருந்தாலும் ஒண்டிக்கு ஒண்டி நேர வர சொல்லு நான் பாத்துகறேன்னு" ஒரே ரகளை நடக்கும்...அப்புறம் அந்தம்மா தலையில அடிச்சுக்குட்டு போயிடும்.(எல்லாம் கற்பனைதாங்க..)

அம்மாவுக்கும், பையனுக்கும் உள்ள புரிதல் இருக்கு பாருங்க சான்சே இல்லை.

அம்மான்னா அம்மாதான்..!!! (பாத்தது..படித்து ..கேட்டது மட்டும்..)



இங்க பாருங்க..topic மாற்றி எங்கோயோ போயிட்டேன்..ஆங்..சாந்தி விசயத்துக்கு வரேன்..

ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். ஒன்றாகவே School போயிட்டு, ஒன்றாகவே வருவோம்!

பதினோறாம் வகுப்பு நான் வேற School..அவ வேற School ..இருந்தாலும் சனி, ஞாயிறு சந்திப்போம் , ஒன்றாகவே கோயிலுக்கு போவோம். அப்ப எனக்கு எங்க ஐயா Cycle வாங்கி கொடுத்து இருந்தாங்க!".  சாந்திக்கு Cycle ஓட்ட தெரியாது..அதனால எப்பவும் நான் doubles அடிப்பேன்.

சாந்தியுடன் கூட பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அவளுக்கு இளைய அண்ணன் "சின்னா" அண்ணன், அவர பத்தி சொல்லி ஆகணும்.மற்ற அண்ணன்கள் திருமணம் ஆகிவிட, சின்ன வயதிலே தந்தையை இழந்தவள் என்பதால், சாந்தி மேல ரொம்ப பாசமா இருப்பாரு "சின்னா" அண்ணன்.

உதாரணமா சொல்லனும்னா, தஞ்சையில் அவ்ளோ dress variety இருக்காதுன்னு, சென்னை போய், வாங்கி வருவாரு" அப்படி வாங்கி கொடுத்தாதான் பாசம்னு நான் சொல்லல. அவர் அவ்ளோ செய்ததும், அவரது அர்பணிப்பும் என்ன ஆனது என படிக்கும் பொழுது தெரிந்து கொள்வீர்கள்!.

 "சின்னா" அண்ணன், சாந்திக்கிட்ட, "சைக்கிள் ஓட்ட கத்துக்கோ, சைக்கிள் வாங்கி தரேன்னு" சொல்லல.புது சைக்கிள் வாங்கி கொடுத்து, என்னிடம் கத்துக்க சொன்னார்! என் சைக்கிள் வச்சு கத்து கொடுத்தா..சைக்கிள் கீழ விழும்..சைக்கிள் அடி படும்னு சொன்னார்" அதான் புதுசா வாங்கிட்டேன் சொன்னாரு.."அப்ப.. சாந்தி புது சைக்கிள் விழுந்தா பரவாயில்லையான்னு கேட்டேன்"..சிரிச்சாங்க. "அவங்க அவங்களுக்கு, அவங்க things மேல ஒரு ப்ரியம் இருக்கும்மா" அப்படின்னு சொன்னார்!

சாந்தி, என்கிட்டே சொன்னா, "சைக்கிள் கத்து கொடு..ஆனா என் புது சைக்கிள் கீழ விழ கூடாது betன்னு" ஷ்ஷ் ..தெரியாம OK சொல்லிட்டேன்ங்க..சனி ஞாயுறு தானே meet பண்ணுவோம்..1 hr training..

அன்னைக்கு, அப்படிதான்..சைக்கிள் ஒட்டி கிட்டே...மறந்த மாதிரி காமராஜ் ரோட்டுக்கு வந்துட்டோம்! "அய்யயோ...சாந்தி..அவன் வந்துட போறேன்னு!" சொல்லி முடிக்கறதுக்குள் அவன் வந்துட்டான்!
?

?
அப்படியே உங்க கற்பனை வேற எங்காச்சும் போயுருக்குமே? தெரியுமே உங்கள பத்தி..

அவன் வேற யாரும் இல்லை..காமராஜ் ரோட்டுல இருக்கிற தெரு நாய்..அதுக்கு Two wheeler-ல போறவங்கள கண்டாலே என்ன ஆகுமோ தெரியாது...குறைச்சுகிட்டே பல்ல காட்டிட்டு துரத்திட்டு வரும்..கிட்ட தட்ட சைக்கிள் pedal கிட்ட வந்துடும்..பசங்கன்னா...கால தூக்கி, சைக்கிள் முன்னாடி wheel மேல வச்சுப்பாங்க! பெண்ணா பிறந்துட்டோமேன்னு ..கண்ட ..கண்ட நாயெல்லாம் நினைக்க ..வைக்கும் பாருங்க!  அடச்சே! இதுக்காகவே ஒரு தெரு..சுத்தி போவேன்..சாந்திக்கும் தெரியும்!

அவன் "அவ்வவ் அவ்வ்ன்னு" குறைச்சு கிட்டே!..கவ்வ வர..
என் கவனம் சிதற..
சாந்தி Balance விட..
அவ தொப்புன்னு கீழ விழ..
அப்பாடா!..சைக்கிள் மட்டும்..என் பிடியில..

"அதுக்குள்ளே..வேற ஒரு வண்டி வர..அவன் அவங்கள துரத்திட்டு போயிட்டான்!"

சாந்திக்கு நல்ல அடி..அவளுக்கு அழுகை வந்துச்சு..என்ன பாத்து கேட்டா.."பாவி..சைக்கிள இப்படி பிடுச்சுக்கிட்டு என்னைய விட்டுட்டுயே!"ன்னு. நான் சீரியஸா முகத்த வச்சுகிட்டு  சொன்னேன்.."Bet என்னன்னா சைக்கிள் கீழ விழகூடாதுன்னுதான்..நீ விழ கூடாதுன்னு இல்லை" அப்படின்னு..வலிய மறந்து..அப்படி சிரிச்சா!

அவளுக்கு, சைக்கிள் ஓட்டும் பொழுது, எதிரே எந்த 4 wheeler -ம்வந்துட கூடாது..தொப்புன்னு குதிச்சுடுவா.இந்த லச்சனத்துல ஒட்டுனா..நடக்கிற காரியமா?

சொன்னா நம்ப மாட்டீங்க..சைக்கிள ஓட்ட கத்துக்க.. 6 மாசம் எடுத்துகிட்டா..படுபாவி" நானும் அசரலேயே!..என்னோட training ..அவ்ளோ மோசமான்னு என்னைய தப்பால்லாம் நினைச்சுடாதீங்க! அவள் அப்படிதான்! அப்படி ஒரு நிதானம்!
                                        
அந்த சைக்கிள, அவள வச்சு  balance பண்ணேன் பாருங்க..அந்த experience..வாழ்க்கையிலே எந்த நிலையிலும் நான் balance விடறதே இல்லை..ஹிம்ம் ..இதெல்லாம் படிக்கணும்னு உங்க தலை எழுத்து.

இவ்ளோ பொறுமையா இருக்கிற நான் என்னோட 10 வயதில் எப்படி இருந்தவள் உங்களுக்கு தெரியுமா?  எல்லாத்துலயும் ஒரு flash back இருந்தா சுவாரஷ்யம் தானே!  என்னோட பாலர் பருவம் படிங்கப்பு!

கதையில ஒரு Twist--ஆன்னு கேக்குறீங்கள?
அப்படியெல்லாம் இல்லைங்க..என்னோட வாழ்வின்  சில நிகழ்வுகளில் இருந்து , சில கருத்துக்களை முன் வைக்கலாம்னு தான்! என்ன தையிரியத்துல உன் இஷ்டத்துக்கு உன் கதைய எழுதுறே.. இதெல்லாம் நாங்க படிக்கணுமான்னு கேக்குறீங்களா? வேற வழி இல்லை அப்பு!

நிஜமா சொல்லனும்னா, இப்ப என்னோட பதிவு உங்களுக்கு பிடிக்கலன்னா கூட உங்களால கிழிக்க முடியாதுல்ல, அந்த தைரியம்தான் சாமி வேற ஒன்னும் இல்லை.

திருக்குறள்
குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

விளக்கம்:
நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

(Image courtesy:web)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக