ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வாழும் தேவதைகள்-2!-சித்தி!



வாழும் தேவதைகள்-2! -சித்தி

Small mummy...அப்படி தான் என் சித்தியை கூப்பிடுவேன். ..
சித்தி அவ்வளவு அழகு...அமைதி ..பொறுமை..நிறைந்தவர்..மலேசியாவில் வசிக்கிறார்..ஒரு அழகு பையன்..

இரும்பு மனுசி..எவ்வளவு போராட்டத்தையும்,தன்னுள்ளே அடக்கி யாருடைய தயவும் இன்றி வெற்றி காணும் திறன் படைத்தவர்.

Small mummy you are great!

2 பேருக்கு சமைச்சு இருந்தாலும் ..20 பேருக்கு சமைச்சுட்டு இருந்தாலும்..சமைச்சுட்டு இருக்கிற .சுவடே தெரியாது..Kitchenஅவ்வளவு சுத்தமாக இருக்கும்..சமைக்கிற அடையாளமே இருக்காது..அவ்வளவு நேர்த்தி, இன்னும் அவரிடம் இருந்து கடை பிடிக்க முயல்கிறேன்..ஸ்ஸ்ஸ் முடியல சித்தி முடியல...

"தாயாகி பெற்றெடுக்கும் முன்பே
தாய்மையின் ருசி பிறந்தது..அக்காவின் குழந்தை பிறந்ததிலிருந்து...." எங்கோ படித்தது 

ஆமா சித்தி...உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்தப்ப..உங்களுக்கு 3 வயது.இல்ல? உலகத்திலேயே குட்டி சித்தி எங்களுக்கு தானே? ஆமாம் எங்க அம்மாவிற்கு திருமணதிற்கு பின் பிறந்தவர். வயது வித்தியாசம் ரொம்ப இல்லாததால்..எங்களிடம் ஒரு நட்பு இழையோடும். சித்திகிட்ட என்ன வேணா பேசலாம்..


அம்மாவை உங்கள் உருவில் பார்க்கிறோம் ..

We miss you...

Happy Birthday Small Mummy............


விதிக்கப்பட்ட நம் உறவு..
விதியின் சதியால்..
சிறிது காலம்..பிரித்து விட்ட பொழுதும்...
உள்ளமும், உணர்வுகளும் ..
புரிந்து கொண்டஉறவானது ...
அதுவே..பலமாய் ...
உறவின் பாலமாய் இருக்கிறது..
மனசும்  இதமாய் இருக்கிறது..

சித்தி நீங்க பல்லாண்டு காலம் சந்தோசமா இருக்கணும்..!



குறள்:522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
குறள் விளக்கம்:
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.