செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

DD - 3 (தெய்வீக ராகம்! திவ்யா! -3)

அவர்கிட்ட, பின்னாடியே போய்..சண்டே பேப்பர் தம்பி வாங்கிட்டு வர சொன்னாருன்னு சொல்லி நானே எடுத்துட்டு வந்துட்டேன்.

சீக்கிரமே கிளம்பி திவ்யா வீட்டுக்கு போனேன்., சீக்கிரம் வா  centre-க்கு போகணும்..தீபாவை கண்டு பிடிக்கணும்னு சொன்னேன். எப்படி கண்டு பிடிப்பன்னு கேட்டா? நான் மஞ்சள் கலர் சுடிதார் பொண்ணுதான் தீபான்னேன். அவ அப்படி சிரிச்சா.."அடிப்பாவின்னு..ஏன் இப்படி சிரிக்கறன்னு கேட்டேன்".., அவ பதில் சொல்லல..

 centre-க்கு கிளம்பி போனோம். அங்க பாக்கிற பெண்ணையெல்லாம், தீபாவா இருக்குமான்னே பார்த்தேன். மஞ்சள் கலர் சுடிதாரை தேடினேன்! கடைசியா கண்டு பிடித்தேன்! எங்க சென்டர் மேனேஜர் மேடம், மஞ்சள் சுடிதார் போட்டு இருந்தாங்க. திவ்யாட்ட போய் , இவங்களா இருக்குமான்னு கேட்டேன்.திவ்யா என்ன அடிச்சு இருப்பா!  அவங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைங்க இருக்குன்னா!

என்னைய பார்த்து திவ்யா சொன்னா, எனக்கென்னவோ அந்த "தீபா" நீன்னு சந்தேகமா இருக்குன்னா" ..." அப்படியே ஷாக் ஆயிட்டேன்...என்னதுன்னேன் ?" ..நீ கூட தான் இன்னைக்கு மஞ்சள் சுடிதார்ல வந்து இருக்க!"..அப்பத்தான் குனிஞ்சு பார்த்தேன்..நானும் மஞ்சள் கலந்த சுடிதார் தான் அன்னைக்கு போட்டிருந்தேன்..ஒரே சிரிப்பு."

அவ என்ன பார்த்து "உன்ன கொல்லப்போறேன்" அந்த லெட்டர் தீபாவே இன்னும் படிக்கல, அது உங்கிட்ட தான் இருக்குன்னா..அட ஆமாம் தலையில அடிச்சுக்கிட்டேன்.

வேற கிளாஸ் Students பொன்ணுங்க கிராஸ் பண்ணறப்ப எல்லாம்.."தீபா" ன்னு குறிப்பிட்டு பேசுவேன் ..யாரவது திரும்பி பாத்தா அவதான் தீபா!"  ம்கூம் எவளும் பாக்கல.

 திரும்ப அதே இடத்துல ஏதும் லெட்டர் இருக்கான்னு பார்த்தேன். ஒன்னும் இல்லை. ரெண்டு நாள் தேடி பார்த்தேன் ஒரு பிடியும் கிடைக்கல. லெட்டர் டிஸ்போஸ் பண்ணிட்டு என் சொந்த வேலைய பார்த்தேன். 

கிளாஸ் விட்டு செல்லும் பொழுது, Public Telephone Booth - ல் சித்தியுடன் பேசுவாள் திவ்யா. சித்தி காதல் திருமணம் செய்ததால் அம்மா, தாத்தா எவரும் சித்தியிடம் பேசுவதில்லை என்றாள். சித்தி எங்கு இருக்கிறார் என கேட்டேன். கரந்தையில் (தஞ்சைக்கு அருகில்) என்றாள். அப்பொழுது செல்போன் அறிமுகம் ஆனா நேரம், எங்களிடம் இல்லைஒவ்வொரு தடவையும் குறைந்தது அரை மணி நேரமாவது பேசுவாள். உள்ளே கதவை சாத்திக்கொண்டு பேசுவாள் அன்றாடம் நடந்ததை பற்றி, வீட்டு விஷயம் பற்றி பேசுவாள்.(காதில் விழும்).. சித்தி, இவளிடம் ரொம்ப பாசமாக இருப்பார்கள் என்றாள். நாம ஏதாவது பண்ணி அவங்க அம்மாவை, சித்தியுடன் சேர்த்து வைக்கலாம்னு முயற்சி பண்ணேன்.


மறுநாள் திவ்யா வீட்டுக்கு போகும் பொழுது, திவ்யா அம்மாவிடம், நான் பேச்சு கொடுத்தேன். "காதல் திருமணத்திற்கு" நீங்கள் எதிரியாம்மா? அவுங்க ஷாக் ஆகி, ஏன், என்ன விஷயம் என்றார்கள். திவ்யா இதை எதிர் பார்க்கவில்லை. அவள் முகம் மாறி போயிருந்தது. அவங்க அம்மா உடனே "வேண்டாம், அவளை பத்தி பேச வேணாம்!" என சொல்லி  என ஒரே வார்த்தையில் என் வாயை மூடி விட்டார்கள். வெளியே வந்ததும்,திவ்யா காச்சு..  மூச்சுன்னு கத்தினா ....என்னைய மாட்டிவிட பொறியான்னு கத்தினா..நான் கப் சிப் ஆயிட்டேன் .


தினம்  centre-க்குபோவதும், வரும்பொழுது அவள் சித்தியிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வருவோம். அவள் அம்மாவிடம் இதை பத்தி அவள் சொல்வதில்லை என்பதால். நானும் காட்டிக்கொள்ளவில்லை. இப்படியாக ஒரு மாதம் போயிருக்கும். அன்று, கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரின் மகன் (Boss) செமினார், ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால் மதியம் செல்லவேண்டி இருந்தது. அவள் வீட்டிற்கு சென்றேன். அவள் வரவில்லை, நீ போ என்றாள்! அவர் எடுக்கிற கிளாஸ் யார் கவனிக்கிறது கமெண்ட் அடிச்சா ".  "அவர் நல்லாத்தானே எடுப்பார்! " எப்பவும் அப்படி யாரையும் பேசமாட்டாளேன்னு யோசிச்சுகிட்டே நான் மட்டும் சென்றேன்.


மறுநாள் centre-க்கு போகும்பொழுது, காலேஜ் Final year Project என்ன எடுக்க போறீங்கன்னு, திவ்யாவிடம் , Boss கேட்டார்.  அவள் ஒன்னும் decide பண்ணல அப்படின்னு சொல்லிட்டு மூஞ்ச திருப்பிக்கிட்டா. என்ன கேட்டருன்னு இப்படி பேசுற! "ஓவர்ப்பான்னு" சொன்னேன்.அவ பதிலுக்கு, எல்லாம் இப்படித்தான் பேச்சு கொடுப்பாங்க..அப்புறம் வேற எங்காச்சும் போய் நிக்கும்னா! நான் , அடிப்பாவின்னு நினச்சு கிட்டேன்! இது போல், அவர் சாதாரணமாக எது கேட்டாலும் சரியாக பேசமாட்டாள்! அவர் அந்த பக்கம் போனதும் எள்ளும் கொள்ளும் வெடிப்பாள்! அவருக்கும், அவளைப்பற்றி தெரியும் போல , கண்டுக்காம போயிடுவார். 


சில நாள் கழித்து, சென்னை அவள் அம்மாவுடன் , உறவினர் வீட்டு திருமணத்திற்கு  செல்ல இருந்தாள். எனக்கும் சென்னை செல்ல ஆசை. ன் தாயுமானவரை (அப்பா) கேட்டேன், அக்காவை பாத்துட்டு வரலாம் என்றேன் . ஓகே சொல்ல, நான் ticket எடுக்க இருந்தேன். அவளே எடுத்துவிட்டதாக சொன்னாள்.


தஞ்சை Railway Station,  எங்க Birth-ல ஏறி உக்காந்தோம். கிளம்பும் நேரம், வேகமா ஒருத்தர் வந்து எங்கள்Birth-க்கு எதிரே ஏறினார். யாருன்னு பார்த்த "Boss" .

திவ்யா birth-க்கு  opposite birth அவரோடது ,அவரை பாத்ததும், நான் திவ்யா முஞ்ச பார்த்தேன்! அவ என்ன முறைக்க! நான் கவனிக்காதமாதிரி உக்காந்துட்டேன்!

திவ்யாக்கு பிடிக்காததால், அப்பாகிட்டயும் introduce பண்ணல.


Train, கிளம்ப ஆரம்பிக்க, என் அப்பா, 
அவர்கிட்ட கிட்ட பேச்சு கொடுத்தார், தம்பி என்ன பண்றீங்க? எங்க போறீங்கன்னு ? எனக்கு ஒரே சிரிப்பு. திவ்யா காலின்னு! எங்க அப்பா, என்னையும், திவ்யாவையும், நிறைய புகழ்ந்தார்! கம்ப்யூட்டர் சென்டர்ல - ஒர்க் பண்றோம்னு!  Boss,  "ஆமா! என்னோட சென்டர்லதான்னு சொல்லவும்! " அப்படியே அப்பா ஷாக் ஆயிட்டாரு.. "என்னம்மா?ன்னு" என்னைய பாக்க!  ஆமா, நாங்க introduce பண்றதுக்குள்ள நீங்கலே introduce ஆயிட்டிங்கன்னு சொல்லி தப்பிச்சேன். ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. நான் தூங்கி போனேன்! 

மறுநாள், சென்னை சென்றதும் அவர் அவர் இடத்துக்கு போய்ட்டோம்! சென்னையிலிருந்து திரும்ப வந்ததும், திவ்யாவுக்கு Birthday வந்தது! திவ்யா போட்டு இருந்த dress ரொம்ப அழகா இருந்தது! Costly-வும் இருந்தது. Dress Super -ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே, அவள் இடை மறித்து எதோ சொல்ல வந்தாள்! அதற்குள் அவ அம்மா வந்தார்கள்! என்னம்மா? Birthday-ன்னா சிம்பிளா ஏதாவது வாங்க வேண்டியதுதானே? எதற்கு Costly டிரஸ் எடுத்து கொடுத்தன்னு..என்னைய பார்த்து கேட்டார்கள்!"  என் mind voice "இது எப்ப  நடந்துச்சுன்னு " கேட்டுச்சு!  நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!( இப்படி வடிவேல் மாதிரி நம்பள நிக்க வைக்குறாளே!, இருடின்னு நினைச்சுக்க்ட்டேன்)


கோயில் போலாம்ன்னு கிளம்பினோம்! வெளிய வந்ததும், உண்மைய சொல்லு! யார் எடுத்து கொடுத்த dress -ன்னு கேட்டேன்? "சித்தி கொடுத்து அனுப்பினாங்கன்னா!"   உன்கிட்ட சொல்றதுக்குள்ள அம்மா கேட்டுட்டாங்கன்னு சொன்னா!  சரி பய பிள்ளை போகட்டும்னு விட்டேன்! ஆமா, பொழுதுக்கும் என்கூடதான் வெளிய போறே! எப்போ கொடுத்தாங்கன்னு கேட்டேன்? சென்டர்-ல  courier வந்துச்சுன்னா!  சொல்ல மறந்துட்டேன்னா!

பிள்ளையார் கோயிலுக்குஅர்ச்சனை பண்ண ஒரு கூடை மட்டுமே அவளிடம் இருந்தது, தேங்காய் பழம்,  விளக்கேத்த எலும்பிச்சை பழம், நெருப்பட்டி இருந்தது!


கொஞ்சம் lemon 
பிழிஞ்சுதரியா ? விளக்கேத்தணும்னு கேட்டா!, நான்  ready பண்ணிட்டு இருந்தேன்! 

அப்புறம் அர்ச்சனை பண்ணிட்டு வெளியே வந்தோம்!. அவளிடம் ஒரு plastic bag இருந்தது! உள்ளே எதோ gift box தெரிஞ்சது!  "இது என்ன திடீர்ன்னு, ஒரு Gift எப்படின்னு கேட்டேன்?" நம்ம குருக்கள், தாத்தாவுக்கு வேண்டியவர், தாத்தா சொல்லி இருக்கணும் போல, அதான் Gift கொடுத்தார்ன்னு சொன்னா!"


திரும்ப குருக்களை பார்த்தேன்! அவர்க்கு ஒரு 60 வயசு இருக்கும், அவர் இப்படி gift பார்த்து வாங்கியதாக, எனக்கு தோணவில்லை,  Gift அப்படி Pack பண்ணி இருந்தது!பக்கத்துலயே இருந்தும் பயபுள்ள எதோ நம்மகிட்ட மறைக்குதுன்னு தோணுச்சு! கோயில்ல வேற யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்தேன். 4, 5 பெண்கள் தென்பட்டார்கள்! இனிமே இவமேல ஒரு கண்ணை வைக்கணும்னு நினைச்சு கிட்டேன்!


அம்மாகிட்ட, இந்த Gift நான் கொடுத்தேன்னு தானே சொல்லுவேன்னு கேட்டேன்!, உடனே அவள், "அதேதான்..!  பிடிச்சிட்டியே குட் கேர்ள்ண்ணா" . அப்படியே ஆடிபோய்ட்டேன்!



Mind voice - உண்மையிலேயே குருக்கள் தாத்தா கொடுத்தாதுன்னா, நான் கொடுத்ததா ஏன் சொல்லணும்?. நம்பள "Take diversion " எடுக்க வச்சுட்டு, பய பிள்ளை!எதோ பண்ணி இருக்கு! ஓ! எலும்மிச்சம்பழம் பிழியவைச்சுட்டு, என்னவோ பண்ணி இருக்கான்னு தோணுச்சு! "  ரொம்ப கேள்வி கேட்டா  உசார் ஆயிடுவான்னு "நீ செத்தடி மவளேன்னு" இருக்குன்னு நினைச்சு கிட்டே வீட்டுக்கு போய்ட்டேன்!".



இதே மாதிரி எதனை பல்பு வாங்கினேன் தெரியுமா? Wait பண்ணுங்கப்பு!