திங்கள், 31 ஆகஸ்ட், 2015

ஒரு கனவு கண்டால்! அதை தினம் முயன்றால்!

அக்காவின் குழந்தையை பார்த்ததும், எல்லாம் பறந்து போய்ச்சு.

இருந்தாலும் , தினம் நான் சிங்கப்பூரில் வேலை பார்த்ததும், அங்கு நான் முன்னாடி visit பண்ண இடம் எல்லாம் அடிக்கடி மனகண்ணில் வந்து போகும். குறிப்பிட்ட ஒரு தெருவில் நடந்து போகும்படி அடிக்கடி நினைவில் வந்து போகும்.

தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை( சிங்கப்பூர்) தவணை முறையில் நேசிக்கிறேன்!  (ஹி ஹி!)



விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி
வழியுதே என் சிங்கப்பூர்..

அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்


அழியாமலே ஒரு ஞாபகம்
அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் நினைவால்..
சுவாசம் பெருமூச்சாகும்! 
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை முயற்சி! எத்தனை ஆசை!
தடுமாறுதே தடம் மாறுதே
அட பூமி கனவில் உடைந்து போகுதே! 


(Remix பாடல்:தேவதையை


வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ சிங்கப்பூர்??


(Remix பாடல்: பூங்காற்றிலே..) 



எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா..


கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்...



ஷ்..முடியல இல்ல? 

இப்படியே இருந்தா, எல்லாம் மறந்துடும்னு, சென்னை, நுங்கம்பாக்கம் ஒரு IT company - Dotnet Consultant  வேலை பார்க்க தொடங்கினேன். ஒரு வருடம் ஓடியது.

அப்பொழுது,  ஒரு  Project - Lead பண்ணி முடிக்கணும்னு  என்கிற பொறுப்பு வந்தது.  பொறுப்ப எடுத்துகிட்டா, இடையில முடிக்காம சிங்கப்பூர் போனா மனசு கஷ்டப்படும் (அவ்வளவு விசுவாசம்). அப்படியே Continue பண்ணா  நம்ப Singapore கனவு  தேங்கி போய்டும்னு, 2 மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு பிறகு தெரிவிப்பதாக சொன்னேன். வீட்டுல விடுவாகளா?? முடியாதுன்னுட்டாக!..நான் Onsite Assignment - ன்னு பீலா விட்டுட்டு
அப்படியே சிங்கப்பூர் கிளம்பிட்டேன்.

சிங்கபூர் வந்தவுடனே, நம்ப அண்ணனுமானவர், அதான் தம்பி, எங்க உங்க Company? , நான் Office போறப்ப Taxi-ல விடறேன்னார். இனிமே தானே Company கண்டு பிடிக்கணும்னு ஈஈ ன்னேன்..தலையில அடிச்சுட்டு போயிட்டாரு.

வந்து 15 நாளில் வேலையும் கிடைத்து, Employment Pass Approve ஆகி விட்டது. ஆம் என் கனவு நிறைவேறியது. அப்படியே சென்னை வேலையை resign பண்ணினேன்.

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்! (
பாடல்: ஒவ்வொரு பூக்களுமே சொல்..!)






என் விடா முயற்சி, எனக்கு பலன் கொடுத்தது. நான் எனக்கு வேலை கிடைக்காமல் சிங்கையில் இருந்த காலத்தில். "இந்த இடம் எனக்கு மிக பிடித்து இருக்கிறது ..உன்னிடத்தில் எனக்கொரு இடம் இல்லையா?" என அடிக்கடி கேட்பேன்! " (எல்லாம் சிங்கப்பூர் கிட்டதான் பேசுவேன்!)
சிரிக்காதிங்க, நீங்களும் முயற்சி பண்ணுங்க..எல்லாமே நல்லதா நடுக்கும். ஒரு முறை, எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய கட்டுரை படிக்க நேர்ந்தது, அதில் அவர் சொல்லி இருப்பார், அவருக்கு கால் வலியால் , அவதி படும்பொழுது, அவர் தன் வலி உள்ள காலிடம் "என் வலியை போக்கி விடு, உனக்கு கொலுசு போடுறேன்"  என பேசுவாராம். நிதர்சனமான உண்மை. அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். எல்லாம் மனம் செய்யும் மாயைதான். ஆனால் அதில் ஒரு சுவாரசியம்.

ஆனால் கலாம் சார் சொன்னபடி பார்த்தல், என் வழி..

ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!


மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!


வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!  (பாடல்: ஒவ்வொரு பூக்களுமே சொல்..!)

எனக்கென ஒரு இடம் கிடைத்த அந்த தருணத்தில், சிங்கப்பூர் மண்ணை எடுத்து, கொஞ்ச நேரம் என் கையில் வைத்து கொண்டேன். ஏன்? எதற்கு? என சொல்ல தெரியவில்லை. அந்த தருணம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பெண்ணே -என்னை
என்ன செய்ய உத்தேசம்..!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!


அடி ஆத்தாடி... 
இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது 
சரிதானா..! 
அடி அம்மாடி.. 
ஒரு அலை வந்து மனசில அடிக்குது 
அது தானா..!

உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவள்  மேகம் ஆக... யாரோ(சிங்கப்பூர்) காரணம்..!



 திருக்குறள்:619

தெய்வத்தான் ஆகா எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.


குறள் விளக்கம்:

நல்லோர்களாகிய நம் முன்னோர்களின் முயற்சிகள் 

தோல்வியை தந்திருந்தாலும், 

நம் விடாமுயற்சி, நம் உடல் உழைப்புக் கேற்ற 

வெற்றியைத் தரும்