செவ்வாய், 30 ஜூன், 2015

என் இலட்சியத்தை தேடி - 2!

இரண்டு shift வேலை, 7 am to  2 pm, 3pm to 10 pm, நான் 7 am to  2 pm Shift எடுத்து என் வேலையை ஆரம்பித்தேன். தஞ்சையில் 5.45 பஸ்சில் கிளம்பினால் தான் 7 மணிக்கு வர முடியும்.கொஞ்சம் சிரமமாக இருந்தது.  ஆரம்பத்தில்  வேலையில் ஒரு doubt , தஞ்சையில் centre -ல் தெரிந்த பெண்ணிடம் கேட்க போய், அந்த பெண் என்னிடம் "எப்படி சமாளிக்க போறீங்க?பேசாம வேலைய விட்டுங்கன்னார்.."  கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.


அதுக்கெல்லாம் கவலை படலை. இதுக்கெல்லாம் முடங்கி உக்காந்துட முடியுமா? ஒண்ணுமே தெரியலன்னா OK.  Practical experience, இல்லாததால சில கஷ்டம். எப்படியும் சமாளிக்கணும்னு  தோணுச்சு 
 
எனது morning Shift முடிந்து, மதியம்  3pm to 7 pm, என் வேலையை continue பண்ணினேன்.. தெரியாததை 2nd shift நபர்களிடம் கற்றுக்கொண்டு , என் வேலையை முடித்தேன். அதாவது 7 மணி நேரம் முடிக்க வேண்டியதை, கற்று கொண்டு 12 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய நிலைமையில் இருந்தேன். 2nd Shift நபர்கள் என்னை training எடுக்க வந்தவராக தான் நினைத்து இருப்பார்கள். வேற எதுவுமே பேச மாட்டேன், ரொம்ப அமைதின்னு நினைச்சு இருப்பாங்க. ஆனா உண்மை என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும்.


 3 மாதத்தில் 1st Shift - ல் 7 மணி நேரத்தில் வேலையை முடிக்கும்படி தேறினேன். நல்லபடியா ஒரு வருடம் 6 மாதம் ஓடியது.


 
மனதெல்லாம், சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் ஒன்றரை வருட experience போதுமேன்னு நினைத்தேன். வேலையை விட்டேன். வேலை பார்த்ததெல்லாம் தஞ்சை , திருச்சி, local company, சுத்தமா English communication கிடையாது. அவ்வளவாக பேசவும் தெரியாது. Tamil Medium ன்னு ஏற்கனவே புலம்புனத படிச்சு இருப்பீங்களே..இம். ... Chennai, Bangaloreன்னு Interview Attend பண்ணி இருக்கணும். அதுவும் இல்லை..எவ்ளோ தைரியம் பாருங்க? Singapore போகணும்னு முடிவு பண்ணிட்டேன் .
 
என் தொல்லை தாங்காமல், நம்ப அண்ணனுமானவர் (அதான் தம்பி)  Visa ஏற்பாடு பண்ண, ஏதோ  தைரியம்  flight book பண்ணி கிளம்பிட்டேன். அதுவும் local flight எல்லாம் இல்லை ,  Singapore Airlines...வேலை கிடைச்சுடும்னு அம்புட்டு நம்பிக்கை!
 
முதல் விமான பயணம். அதை அனுபவிக்கும் மன நிலையில் நான் இல்லை. கிளம்பி விட்டோம்? சாத்தியமா? மனதில் ஆயிரம் கேள்விகள்..
அந்த flight முழவதும், என் கனவால் நிரம்பியதாகவே இருந்தது.
 
Singapore Visa 15 நாட்கள் தான் கொடுத்தார்கள், மீண்டும் 15 நாள் extend பண்ணலாம் என்றார்கள். ஒரு மாதத்தில் வேலை வாங்க வேண்டும்??
 

என் கனவு நிறைவேறியதா? Pls wait...

 

திருக்குறள் :  591:

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
  

பொருள் :

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

 

வெள்ளி, 19 ஜூன், 2015

என் இலட்சியத்தை தேடி! - 1

அப்பாடி ஒரு வழியா ஐயாவிடம் OK வாங்கி M.C.A Admission சேர்ந்தாச்சு.
 
எதாவது Programmer - ஆ  Partime Job பாக்கலாம்னு  என் தேடுதலை ஆரம்பித்தேன் . அப்பொழுது Basic Computer Class - Training  எடுத்த அனுபவமும், College students Project Guidance கொடுத்த அனுபவம் மட்டுமே இருந்தது. அதான் உங்களுக்கு தெரியுமே..அதுவும் நம்ப ஊர்ல College Project எல்லாம் நாலு Form பண்ணி DB-Connect பண்ணி Data load பண்ணி காமிச்சாலே Project முடிஞ்சது. (எல்லா College சொல்லப்பா). அம்ம்புட்டு தான் நம்ப Experience.
அந்த சமயத்துல Real time Project experience வேணும்னு  openings பாத்துக்கிட்டே இருந்தேன்.
 
அப்பொழுது  Final year M.C.A ஆரம்பிக்கும் பொழுது,ஒரு May மாதம் "The Hindu" வில் "S/w Programmer" Wanted, Walk- In, TRICHY, Minimum 2 years exp. என Advt வந்தது. கிளம்பிட்டேன். ஒரு 2 Project- local client க்கு, பண்ணாத பீலாவுட்டு Resume Ready பண்ணிகிட்டேன்.  நான் Class எடுத்த Centre -லையும் Inform பண்ணிட்டேன், எதாவது Cross check பண்ணா கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் நல்ல விஷயம் என்பதால் OK சொன்னார்கள்.

 
அதுவும் மறுநாள் walk-in interview, நிறைய Prepare பண்ண time இல்லை. விசாரித்தேன், யாரவது Detail Project பண்ணி இருக்காங்களா என,  M.C. A friend புவனாவின்  சகோதரர் செய்து இருப்பதாக சொன்னாள் . உடனே அத வாங்கி கிட்டு வாங்கி கொண்டு திருச்சி சென்றேன். (போகும்போது Prepare பண்ண).

9 மணிக்கு Trichy, Company அடைந்து விட்டேன். கூட்டம் பார்த்ததும் ஆ என வாயை பிளந்தேன். சரி எவ்ளோ time ஆனாலும் என்னைய examineபண்ணி பாக்கணும்னு  wait பண்ணேன். 1st Round, Written test, 15 கேள்விகள் - Objective Type, பரவாயில்லை OK பண்ணிட்டேன். கிட்டத்தட்ட 300 பேர்ல அப்பவே 130 per filter பண்ணினார்கள், next level Technical Interview க்கு  எனக்கு வந்தது  Queue no.103.
 
3 பேர் கொண்ட குழு, Interview பண்ணியதால் அன்றே முடிக்க திட்டமிட்டார்கள்.
ஐயாவிடம், Phone பண்ணி சொல்லி விட்டு, நான் அந்த Project Record note - detail பார்க்க ஆரம்பித்தேன். வெளியே வருபவரிடம், என்ன Interview, என்ன  கேள்வி , எதுவும் கேட்க  தோணவில்லை. Interview Panel இருக்கிற யாரவது நம்மபள பாத்துட்டா , நம்பள பத்தின Image போயுடுமேன்னு ..ஒரு ஜாக்கிரதை...
 
சரியாக..5 மணி போல் என்னை அழைத்தார்கள். ஷ் அப்பா! அந்த நிமிடம்..அந்த நொடி...சான்ஸ் இல்லை...கண்ண கட்டுச்சு.."கைபிள்ளை எதுவும் காட்டிக்கதேன்னு என்னைய மனச தேத்திக்கிட்டு" உள்ளே போனேன்.
எனக்கு ஒரு 10 technical Question கேட்டு இருப்பார்கள், அதில் 8-ம் , நான் கடைசியாக பார்த்த அந்த Project Note -ல் அடங்கி இருந்தது. என நான் சொன்னால்  நீங்கள் நம்புவீர்களா?
 
Project - Its a product for NBFC (non banking financial companies),VB- க்கான ஆள் எடுப்பதாக சொன்னார்கள். சத்தியமாக, Technical Interview இவ்வளவு சுலபமாக முடியும் நான் எதிர் பார்க்க வில்லை. Result பிறகு தெரிவிப்பதாக சொன்னார்கள். .நான் Tanjore திரும்பினேன். புவனாவுக்கு THANKS சொன்னேன்

சரியாக ஒரு வாரத்தில், எனக்கு Phone செய்து நேரில் வர சொன்னார்கள். Hi, Select ஆயாச்சு, Salary Confirm பண்ண HR Interview  கூப்பிடுவாங்கன்னு, ஜாலியா கிளம்பி போனேன். அங்க போனால், திரும்ப சின்ன கூட்டம், 10  பேர் தானே எடுப்பதாக சொன்னார்கள்!. கிட்டத்தட்ட 25 பேர் நின்னர்கள். கொஞ்சம் கலக்க மாயிருந்தது. உள்ள போனவுடனே..அவர்கள் சொன்னதை கேட்டு. கிர்ருன்னு ஆச்சு..என்ன தெரியுமா?
 
System கொடுத்து ஒரு Task சொல்வார்களாம். அதை செய்து காட்டனும். வடிவேலு Voice-ல "சொல்லவே இல்லைன்னு" Mind voice கேட்டுச்சு.
 
அப்படியே எகிறி குதிக்க்கலாமனு பார்த்தா..2 வது மாடி வேற..சும்மா தமாசுக்கு சொன்னேன்..அப்படி நினைக்கல!
 
எனக்கு வந்த Task என்ன தெரியுமா??  2 hours time, VB Use பண்ணி Graph போட்டு காட்டனும். சத்தியமா எனக்கு தெரியல. Basic Program- னா OK .
அப்படியே Google Try பண்ணேன். Internet Connection வைக்கலை. படுபாவிங்க!
 
அப்பத்தான். Google இல்லன்னா பாதி பேருக்கு இங்க வேலை இல்லைன்னு எங்கோ படிச்சா ஜோக் வேற நாபகம் வந்துச்சு. ஹி ஹி 

 
Application Open பண்ணி, Insert Object போட்டு, Graph Insert பண்ணேன் . Application run பண்ணி Check பண்ணேன், X, Y position Input கொடுத்தா Graph Generate ஆயிடும். நான் ஒன்னும் பன்னல, அது plug-in control தான். ஷ் ஷ் அப்பா!
45 mins -ல, Task கொடுத்தவர கூப்பிட்டு காமிச்சேன். அவரும் test பண்ணிட்டு. வெளியே wait பண்ண சொன்னார்கள். அரை மணி நேரத்தில் என்னை அழைத்து  Salary Confirm பண்ணி Appointment Order கொடுத்து விட்டார்கள்.
 
Final Round Interview - என் திறமைக்கான வெற்றி அல்ல, என் முயற்சிக்கான வெற்றி என தெளிவாக விளங்கியது.
 
 
அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கையை காப்பாத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் வந்தது. 5 நாளில் வேலைக்கு சேர்ந்தேன்.

வேளையில் சமாளிக்க முடிந்ததா? 
முடியல. யாரடி மோகினி படத்துல  தனுஷ், ஒரே நாள் படிச்சு Project பண்ற மாதிரி விஷயம் இல்லைன்னு தெளிவா விளங்குச்சு!

தாக்கு பிடிச்சேனா?

Pls Wait...
 
குறள்:611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
        
குறள் விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

குறள்:620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
        
குறள் விளக்கம்:
மனம் தளராதும் தாமதிக்காதும் முயற்சி செய்பவர், தமக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியுறச் செய்வர்.
 

புதன், 17 ஜூன், 2015

என் லட்சியம்!

Bsc (Maths), கல்லூரி படிப்புக்கு பின்,  ஐயாவின் ஆசைப்படி Group - 1, Main exam, Mathematics. எடுத்து எழுதினேன். மிகவும் சிரமமாக இருந்தது. 
ஏனோ தானோன்னு எழுதினேன். தேர்வாகவில்லை(ஐயா சொல்ற மாதிரி நானெல்லாம் நுனி புள் மேஞ்ச மாடு).

 M.C.A படிக்கணும்னு ஐயாகிட்ட கேட்டேன், ஐயாவோ, விரைவில் எனக்கு திருமணம் செய்ய இருப்பதாகவும், 3 வருடம் படிப்பு தாமதமாகிவிடும் என்றார்கள். (எல்லாம் அம்மா இல்லாததால் தான், அவர் கடமையை நேரத்தில் செய்ய நினைத்தார்கள்)

உறவிலே ஒரு வரன் வர, அதை முடிக்க ஆயத்தமானார்கள்.அவர்கள் வரதட்சணை குறியாக இருந்தாது எனக்கு பிடிக்க வில்லை.என் மனதுக்கு பிடிக்க வில்லை, என ஆஷ்தான பிள்ளையாரிடம்(Municipal colany) போய் வேண்டினேன். "கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடு" "உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன் என"

 
அட!!!..2 நாளில் பிறிதொரு கல்யாண  பேச்சு வார்த்தையில், அவர்கள்
பேச்சு வார்த்தை பிடிக்காமல், ஐயாவே "என் மகளுக்கு இப்போதைக்கு திருமணம் செய்வதாய் இல்லை, நீங்கள் கிளம்புங்கள்" என சொல்லி விட்டார்கள்.
 
அந்த சமயத்தில் தான், நாம இப்படியே இருக்க கூடாது ..மேல படிக்கணும், அதுவும்   M.C.A படிக்கணும்னு தோணுச்சு

அப்ப, நம்ப தம்பி சிங்கையில் தான் இருந்தார். அவர் அனுப்பிய Colorful photo பாத்து மெர்சலாயிட்டேன் .
 
M.C.A முடித்து , சிங்கப்பூரில் Software Engineer வேலை பாக்கணும் என லட்சியம் தோன்றியது . என் லட்சியம் அடையும் நோக்கத்தில், பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க மறந்தேன். அதுக்கு அந்த பிள்ளையார் என்ன பண்ணார் தெரியுமா?
Pls..wait...I will tell you later...
 
வீட்டையும் பாத்துக்கிட்டு படிக்கனும்னா, Distance Education தான் சரின்னு, check பண்ணா, அடுத்த நாள், Bharathidasan university, M.C.A படிப்புக்கு Application கொடுக்க
கடைசி நாள், ஐயா, உடனே OK சொல்லும் மன நிலையில் இல்லை என தெரிந்தது.
 
 
மொள்ளமாரிதனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும்..மனசு சொல்லுச்சு
நானே ஐயா Sign, போட்டு Application, கொடுத்து வந்துவிட்டேன்.
Acknowldgement / Admission card ஏதும் வீட்டுக்கு வந்துட கூடாது வேற ..
தாத்தா வீட்டு Address கொடுத்துவிட்டேன். அப்பால நாலு தெரு தள்ளி தான் தாத்தா(அம்மா வழி தாத்தா) இருந்தாக..

அப்பாவும், தாத்தாவும் பேசிக்க மாட்டாக, போட்டு கொடுக்கவும் வேலை இல்லை...ஷ்ஷ் ..அப்பா!! இந்த ஒரு சின்ன மூளை..  என்னவெல்லாம் யோசிக்க வைக்குது...
 
மனசு பக் பக் என அடித்து கொண்டிருந்தது. 
 
என் லட்சியம் நிறைவேறியதா? ஐயா OK சொன்னார்களா ?
 
Pls wait....
 
அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:67)
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
 
பொருள்:
தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவனைக் கற்றோர் கூடி இருக்கும் அவையில் முந்தியிருக்குமாறு கல்வியில் வல்லனாக்குதல்.