சனி, 25 ஜனவரி, 2014

துரை தாத்தா!

என் தாத்தாவிற்கு ஐந்து பிள்ளைகள் பிறந்து இறந்த பின், என் தந்தை பிறந்ததாக தாத்தா சொல்வார், என் பாட்டி பதினோராவது பிள்ளை பிறக்கும் பொழுது கருப்பை வெடித்து(என்ன கொடுமை!) இறந்ததாக என் தாத்தா சொல்வார்.

எங்கள் ஊரில் ஒரு பழக்கம், (உங்கள் ஊரிலும் இருக்கலாம்) இறந்த நாள் அன்று, இடுகாட்டுக்கு சென்ற உற்றார் உறவினர், இறந்தவர் வீட்டில் அன்று இரவு சாப்பிடுவார்கள்.

அப்படி என் தாத்தா உறவினருடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது, சாம்பாருக்கு நெய் கொண்டு வரும்படி கேட்டாராம். என் தாத்தா தன சாப்பாட்டு ருசியை அன்று கூட விட்டு கொடுக்க தயாராக இல்லை என்பது தான் உண்மை. என் உறவினர்கள் இன்றும் ஆச்சரியப்படும் விசயம் இது. எனக்குள் எழுந்த கேள்விகள்,

என் பாட்டியின் பதினைந்து வருட தாம்பத்தியம் எப்படி இருந்து இருக்கும்?

என் தாத்தா, என் பாட்டியை பிள்ளை பெற்று கொடுக்கும் இயந்திரமாகத்தான் பார்த்தாரா?

இன்றும் மனைவியை,  இயந்திரமாக பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  இன்றும் தன் பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம் கலந்தாலோசிக்காத ஆண்கள், தனது முடிவே சரியென நினைப்பவர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறான ஆண்கள் எதிர்பாராத விதமாக வகையில், அவர்கள் இல்லாத சூல்நிலையில் அந்த குடும்பம் திக்கு முக்காடி போகும்.

அதுவும் கடன் கொடுக்கல், வாங்க இருப்பின், அந்த குடும்பத்தின் நிலைமையை கேட்கவே வேண்டாம். அவர்களை ஏமாற்ற ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கும்.

உங்கள் மனைவி, உங்களுக்கு பின் உங்கள் குடும்பத்தை அவர் தான் காப்பாற்ற வேண்டும்((நீங்கள் நம்பினாலும், நம்பா விட்டாலும் இதுதான் உண்மை), இதற்க்கு உங்கள் மனைவியை தயார் படுத்தி வைத்து இருக்குறீர்களா?

பெண் பிள்ளைகளை வளர்க்கும் பொழுது அவர்களுக்கென்று தனித்தன்மை ஏற்படும் வகையில் வளருங்கள். அப்படி வளர்ந்த பிள்ளைகள் விவரம் தெரிந்தவர்கள் இருப்பார்கள். உங்கள் மனைவி வெளி உலகம் தெரியாமல் வளர்ந்தவர் ஆயின், உங்களை திருமணம் செய்த பின்னும் வெளி உலகம் தெரியாமல் இருக்கிறார் எனில்,அதற்க்கு  நீங்கள் தான் பொறுப்பாளி.

அதற்க்கு என்னவெல்லாம் செய்யலாம்,

உங்கள் மனைவி, நீங்கள் இல்லாத சூல்நிலையிலும்,தன்னம்பிக்கையோடு ,  தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என நினையுங்கள்.

உனக்கு ஒன்றும் தெரியாது, பேசாம வேலைய பாரு என ஒதுக்கி விட்டு வேலையை பார்க்காதீர்கள். அவருக்கு புரியும்படி கற்று கொடுங்கள். அவர் அதற்கெல்லாம் லாயக்கு இல்லை என்று நீங்களே  முடிவு செய்யாதீர்கள்.

வங்கி பரிமாற்றமோ, உங்கள் குழந்தைக்கு பீஸ் கட்டுவதோ, சிறு சிறு வேலைகளை அவர்களை விட்டு செய்ய சொல்லுங்கள்.

உங்கள் மனைவி விபரம் தெரிந்தவர் ஆகிவிட்டால் உங்களுக்கு மரியாதை இருக்காது என நீங்களே முடிவு செய்யாதீர்கள். அவர் உங்கள் மனைவி, உங்களுக்கான கௌரவத்தை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டார். உங்களுக்கு வேண்டியது எல்லாம் நம்பிக்கைதான்.

பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தை, உங்கள் நம்பக தகவல்களை, சிலர் ஈமெயில்-ல் வைத்து இருப்பீர்கள், இருப்பினும்ஒரு குறிபேட்டில் எழுதி வையுங்கள். வாங்கிய நாள், திருப்பி கொடுத்த நாள் அனைத்தையும் எழுதி வையுங்கள். அதை உங்கள் மனைவியிடம் கொடுத்து வையுங்கள்.

நீங்கள் உங்கள் பண பரிமாற்றம் விஷயம் அனைத்தும் உங்கள் மனைவிக்கு தெரியும் என்ற விசயத்தை பணம் வாங்குபவர்களுக்கு மறைமுகமாக தெரிவியுங்கள். பின்னாளில், உங்கள் குடும்பம் ஏமாறாமல் இருக்க வசதியாக இருக்கும்.

மனிதம் வளர்ப்போம். எங்கும் சந்தோசம் நிறையட்டும்.

"நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலை கழகம்" என நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டும்.
 

4 கருத்துகள்: