புதன், 15 ஜனவரி, 2014


ஸ்ரீ குரு கீதை ...





எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு
குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை
குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை
குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை
குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை
குருவிற்கு சமமான உயர்வுமில்லை
சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்
தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி
பூஜைக்கு மூலம் குருவின் பாதம்
மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்
முக்திக்கு மூலம் குருவின் கிருபை
*************************************************************************

மகா பெரியவா அருள்வாக்கு

* இதயமே கடவுளின் இருப்பிடம். அதன் தூய்மையை காப்பது நம் கடமை.

* தினமும் காலையில் ஐந்து நிமிடமாவது இஷ்ட தெய்வத்தின் திருவடிகளை மனதில் தியானியுங்கள்.

* உண்ணும் உணவை கடவுளுக்கு நன்றியுடன் அர்ப்பணித்து விட்டு, பிரசாதமாக சாப்பிடுங்கள்.

* ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். ஒழுக்கமுடையவன் ஈடுபடும் எந்தச் செயலிலும் அழகுணர்வு மிளிரும்.

* கடவுள் நமக்கு சக்தியும், புத்தியும் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.

“நம்ம வீடுகளுக்கு யார் வந்தாலும், அவாளுக்கு வயறு நன்னா நெறையற மாதிரி, முகம் சுளிக்காம, சந்தோஷமா சாப்பாடு போட்டாலும்,தர்மம்ன்னு யார் வந்தாலும் நம்மால முடிஞ்சதை தாராளமா குடுத்தாலும்….இகலோக சௌக்யமும் பரலோக சௌக்யமும் நிச்சயமா கெடைக்கும்!..”

- காஞ்சிப்பெரியவர்
நன்றி - rightmantra.com

*******************************************************************
வணக்கம்!
என் வாசல் வரை வந்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

என் வாழ்வில் சந்தித்த சாதாரண மனிதர்களின் சிறந்ததொரு பக்கத்தை உங்களிடம் பகிர போகிறேன்.

என் படைப்பு நிச்சயம் உங்களை..
சமயத்தில் சிந்திக்கவும்..
சமயத்தில் சிரிக்கவும் வைக்கும்.

என் முகவரி தேடி வந்த உங்களில் யாரேனும் ஒருவருக்கேனும் சின்னதா நேர்மறையான மாற்றம் நிகழ்ந்தால் நான் வெற்றி அடைந்து விட்டதாக சந்தோஷப்படுவேன்.

ஆசிர்வதிக்கப்பட்டவள்!

என் உறவினரோ, என் நண்பரோ இல்லாத நீங்கள் என் முகவரி தேடி வந்து இருந்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் தானே!

என் வாழ்வில் புயல் வீசும் தருணத்திலும், ஆலமர நிழலில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே உங்களுடன் பேசும் மன நிலையில் நான் இருக்கேன் என்றால் நான் ஆசிர்வதிக்கபட்டவள் தானே!

எனக்கு பிடித்த மகாகவி பாரதியின் வரிகள்,

"தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?"

எனக்கு பிடித்த பாடல் வரிகள்..(படம்: சத்தம் போடாதே)

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமாலே கண்டம் தாண்டுமே

முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்ததே வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிக்களுகெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதே வா

பிடித்த வசனம்(படம்: வீரம்)
நம்ம சுத்தி இருக்குறவங்கள நாம நல்லபடியா
பாத்துகிட்டா ..கடவுள் நம்மள பாத்துக்குவான்..

பிடித்த திருக்குறள்:
குறள்: 314 :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல்.

Inspired Quotes

We should not give up and we should not allow the problem to defeat us.
- Abdul Kalam
You have to dream before your dreams can come true.
- Abdul Kalam




4 கருத்துகள்:

  1. பகிர்ந்துகொள்ளப்படும் இன்பம் இரட்டிப்பாகிறது. பகிர்ந்துகொள்ளப்படும் துன்பம் பாதியாக குறைகிறது.

    இன்பம் பன்மடங்கு பெருகவும், துன்பம் கரைந்து காணாமல் போகவும் உங்கள் எழுத்துக்கள் உதவும் என்று நம்புகிறேன்.

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    - சுந்தர்

    பதிலளிநீக்கு