வெள்ளி, 31 ஜனவரி, 2014

தாயுமானவன்-3

எனக்கு தெரிந்தவர்கள், ஐயா, கிரிமினல் லாயரா? இல்லை சிவிலா? என என் சின்ன வயதில் கேட்பார்கள். எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஐயாவிடம் கிரிமினல், சிவில் அப்படின்னா என்னவென்று கேட்டேன்.
ஐயா, சொன்னார்கள்.  உதாரணமாக, ஒரே இடம் எனக்கு சொந்தமானது என இருவர் சொன்னால், அவர்கள் நீதி மன்றத்தை அணுகி, முறையாக நீதி பெற்றால், அது சிவில். அதே இடத்திற்காக, அவர்கள் நீதிமன்றத்தை அணுகாமல், அவர்கள் அடித்துகொண்டார்கள் எனில், அது கிரிமினல் என்றார்கள்.  அந்த வயதில், கிரிமினல் என்றால் எனக்கு அந்தளவில் தெரிந்தால் பொழுதும் என்று ஐயா சொன்ன பதில் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது

ஐயா, சாப்பாடு விசயத்தில் விருப்பமானவர். தினம் ஒரு குழம்பு, ரசம்,கூட்டு, பொரியல், துவையல், ஒரு கீரை கட்டாயம் இருக்கனும். என்ன மழையானாலும், கீரை எப்படியாவது வாங்கி வருவார்கள். இல்லையெனில், வீட்டில் உள்ள முருங்கை கீரையாவது செய்யவேண்டும்.

ஐயாவிடம், சமையலில், எதுவும் தெரியவில்லை என சொல்ல முடியாது,
"சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என சொல்வார்கள்" ஒரு பெண்ணுக்கு சமையல் ரொம்பவும் முக்கியம், எதோடு, எது சேர்த்தல் ருசியை கூட்டலாம் என அறிந்து செயல் படனும் என்பார்கள். சமையலும் ஒரு கலைதான், விரும்பி செய்தால் சரியாக வரும். கடமைக்கு செய்யகூடாது என்பார்கள். ஐயா பிரியாணி செய்து தருவார்கள், அவ்வளவு அம்சமாக இருக்கும். ஏதும், விசேசம் என்றால் இலையில் சாப்பிடும் பொழுது, பரிமாறும் விதம் சொல்லி கொடுப்பார்கள்.

 
 
 ஐயா, அரசியலில் சிறிது காலம் பணியாற்றியபடியால், கொஞ்சம் பிரபலமாக பலருக்கு தெரியும், ஐயாவை, சில விழாக்களுக்கு மேடையில் பேச, தலைமை தாங்க அழைப்பார்கள், தலைப்பு கொடுத்தால் பொழுதும், அதற்காக தனியாக மெனக்கெட மாட்டார்கள். அப்படியே பேசிவிட்டு வந்துடுவார்கள்.  நீங்களும் நேரம் கிடைக்கும் பொழுது நிறைய புத்தகம் படியுங்கள், இணையத்திலே நேரம் கிடைக்கும் பொழுது படியுங்கள். இல்லை நிறைய விஷயம் தெரிந்தவர்களை நண்பர்களாக வைத்து கொள்ளுங்கள். கேள்வி ஞானம் வளரும்.
 

1 கருத்து:

  1. நிறைய படிக்க வேண்டும்... சரியான யோசனை... அதை விட அவர் தினமும் தவறாமல் உணவில் கீரை சேர்த்துக் கொண்டுள்ளார்... மிகவும் முக்கியமான ஒன்று...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு