ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

அதுவும், இதுவும்!

அப்பெல்லாம் சின்ன வயசுல, ஐயாவுக்கு மேல பயந்த மத்த ஆளுங்க..எல்லாம் வேற யாரு? எல்லாம் நீங்க தான். அதாங்க "பேய், பிசாசு." எந்த புண்ணியவான்/புண்ணியவதி முதல் முதலா "அங்க போகாத அது இருக்கு" "இங்க போகாத இது இருக்கு" (இப்பக்கூட பாருங்க அந்த effect! அந்த வார்த்தைய போடவே பயமா இருக்கு,  எங்க பக்கத்துல வந்து நின்னுடுமோன்னு).

அப்பெல்லாம் இந்த பய புள்ளைங்க வேற கிலிய ஏற்படுத்தும்!  ராத்திரியான பாம்புன்னு சொல்ல கூடாது! மேல சொன்ன வார்த்தை எல்லாம் சொல்லக்கூடாதுன்னு.. அதுங்க காதுல விழுந்தா வந்துடும்னு!" ஷ் இப்ப நினைச்சாலும் கண்ண கட்டுது. நம்ம weakness மட்டும் யார்கிட்டயும் காட்டிக்கவே கூடாது!

                                

அப்பெல்லாம், எங்கள பாத்துக்கிட்ட அந்தம்மா, "என்னதான் Fan காத்து இருந்தாலும், அந்த வேப்ப மர காத்து சுகமே தனின்னு" ஜன்னல சாத்திட்டு படுக்க Allow பண்ண மாட்டாங்க!

நாம பயந்து கொஞ்சம் ஆர்ப்பாட்டம் பண்ண, ஐயாகிட்ட போட்டு கொடுத்துடும் அந்த அம்மா. வேற வழி இல்லை. அப்ப படுத்துக்கிட்டு அந்த வேப்ப மரத்த லேசா ஒர கண்ணால பாக்கறப்ப! அட ஆண்டவா!" ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு, அதுவாவும், ஒவ்வொரு இதுவாவும் தெரியும் பாருங்க.. அட அட..கண்ண இறுக்கி மூடிகிட்டு கட்டில்லிருந்து இறங்கி, கட்டிலுக்கு கீழ படுத்துக்குவேன்! ஷ் அப்பாடா!


ராத்திரில, எது வெடிச்சாலும் வெடிக்கட்டும்னு 'அதுக்கெல்லாம்' போறதே இல்ல. அப்படியே வந்தாலும், வளர்த்த அந்த அம்மாவ கூப்பிட்டா திட்டிக்கிட்டே வரும், அதுக்கு பயந்துகிட்டு, அக்காவ துணைக்கு கூப்பிட்டா மனுசி சாமானியமா எழுந்திருக்க மாட்டாங்க. அக்காவ எப்படியாவது கூப்பிட்டு போவேன். (வீட்டுக்குள்ளேதான், 2  room தாண்டி போகணும் அவ்ளோ தான்!)

ஒரு நாள் அப்படிதான் மார்கழி மாதம், நான் போயிட்டு வர, குளிருக்கு, அக்கா, போர்வையா முக்காடா போத்திக்கிட்டு, உக்காந்துகிட்டே தூங்கிகிட்டு இருக்க, அத பாத்து நான் கத்த, நான் கத்துரத பார்த்து அவங்க கத்த, ஒரே கூத்துதான், அப்பத்தான் தெரியும், அவுகளுக்கும், அதே பயம் இருந்ததும், மனுசி சும்மா நடுச்சுக்கிட்டு இருந்திருக்காங்கன்னு. செம கூத்து! ஐயாகிட்ட நல்ல பாட்டு வாங்கினோம். ஹிம்

என்னை நீ!
பார்த்ததும் இல்லை!
என்னை நீ!
நினைத்ததும் இல்லை!
ஆனால்
பார்க்காமலே..
நினைக்காமலே..
ஆட்டிவைக்கிராயே! என்ன?
பூர்வ ஜென்மத்து பந்தமோ!

ஷ்.. நம்ம கவிதை எழுதலன்ன யாரு எழுதுவாக 'அதுகளுக்காக' பாவம்!

எங்க போனாலும், இருட்டுறதுக்குள்ள வந்துடறது, அப்படி எப்பயாச்சும் இருட்டிடுச்சுன்னா, முடிஞ்சது கதை..ஓட ஓட தூரமும் குறையாது! வீடும் வாராது! கதைதான்! நான் சைக்கிள் ஒட்டி வர்றப்ப, என் சைக்கிள் பின்னாடி யாரோ பிடிச்சு இழுக்கிற மாதிரியே இருக்கும். சைக்கிள் இருக்கிற இடத்திலே ஓட்டுற மாதிரி இருக்கும்..கடவுளே! கடவுளே. என்ன பொழப்புடா சாமி!

இப்பகூட பாருங்க எந்த பிசாசு இத படிச்சுட்டு இருக்கோன்னு..பக் பக்ன்னு இருக்கு!  (ஹிஹி)

உங்க பிள்ளைங்ககிட்ட தப்பி தவிர அத சொல்லி வைச்சுடாதீங்க! அவங்க உள் மனசுல ஓரத்துல ஆழமா பதிஞ்சுடும், தனிய போக வர பயப்புடுவாங்க! கஷ்டம்! குழந்தைங்கள பயம் மட்டும் ஆட்கொண்டால், அவர்கள் in-secured ஆகத்தான் feel பண்ணுவார்கள்.

உங்கள் பிள்ளைங்ககிட்ட தெளிவா சொல்லிடுங்க அப்படி எதுவும் இல்லைன்னு. ஏன்னா அங்க இங்க, பயபுள்ளங்க ஏதாவது சொல்லி அப்புறமா நாம எடுத்து சொல்லி..தெளியவச்சு..ஷ்ஷ்..முடியாதுங்க. அவ்ளோதான் சொல்லிட்டேன்!

நம்ம பிள்ளைங்க, எந்தவித பயமோ, தயக்கமோ இல்லாமல் வீர நடை போடணும் இல்ல!




(Image Courtesy: Web)

3 கருத்துகள்: