பாத்திமா!
சேர்ந்து இருந்த நாட்கள் மிக குறைவு, ஆனாலும் ஏழு ஜென்மம் தொடர்ந்தது போல் ஒரு பந்தம். குறைவாக பேசுவோம், நிறைய சிரிப்போம்!
அவர் திருமணத்திற்கு முன், தன்னுடன் வேலை பார்த்த நண்பர்கள், தோழிகளை வீட்டுக்கு அழைத்து, காபி போட போய்.. பால் எப்படி காச்சுறது எப்படின்னு தெரியாம..தெரியாமல், கொஞ்சம் கருகவிட்டு அதிலே காபி போட்டு, அனைவருக்கும் கொடுத்ததும், அந்த நண்பர்களில் ஒருவர்," அதை குடித்து விட்டு" "இந்த பொண்ணை எல்லாம் எவன் கட்டுவான்னு?" (இவர் இல்லாத பொழுது) கேட்டதும். பின் மற்ற தோழியின் மூலம் பாத்திமா தெரிந்து கொண்டதும். அத கேட்ட அந்த ஒரு கேள்விக்காக...காலம் பூரா அந்த பொண்ணு கையிலேயே காபி குடின்னு அந்த ஆண்டவன் முடிவு எடுத்தும்..இதை யார்கிட்டயும் சொல்லாதீங்கன்னு பாத்திமா, என்கிட்டே சொன்னதும், அதை இது வரைக்கும் நான் Maintain பண்ணதும், இனியும் நான் Maintain பண்ண போறதும் ...ரகசியம்...ஷ்ஷ்...முடியல!...
இன்னைக்கு தான் நீங்க பிரியாணி Master ஆயிட்டீங்கள்ள..பாத்திமா Free-யா விடுங்க ....
தோழிகள் கூட்டம் அனைவருக்கும் ஒரு சேர தகவல் பரிமாறுவது, FB-ல தவறாமல் like போடுவது (அனைவருக்கும்). குழந்தைகளையும் கவனித்துகொண்டு, வேலைக்கும் சென்றுகொண்டு எப்படி இப்படி Personal Relationship maintain பண்ணுகிறார் என வியப்பேன். Hats off to you Fathima!
என்னை, எத பண்ணலும் "கலக்குறீங்க" "கலக்குறீங்கன்னு" சொல்லி சொல்லி உசுபேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கும் அன்பு தோழி!
தானும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்தி பார்க்கும் குணம் கொண்ட உற்ற தோழி!.
காலம் சில நபர்களை, ரத்த பந்தமாக அமைக்காத பொழுது, உடனே பயணிக்கும் தோழியாய், தோழர்களாய் அமைத்து விடும் என்பதை மனபூர்வமாக நம்புபவள் நான்!
உன்போன்ற தோழிகள்
இல்லை எனில்..
நான் இங்கு இல்லை....
உடன் பிறக்கவில்லை என்றாலும்..
உற்ற தோழி ஆனாய்..
உடன் பட்டவர்களானோம்...
அன்பால் ஆர்பரிக்கிறோம்..
பண்பால் பரவசமானோம்..
என் உடன் பிறவா சகோதரி...நீ..
பல்லாண்டு காலம்...
நோய் நொடி இன்றி...
நீண்ட ஆரோக்கியத்துடன்
எல்லா வளமும், நலமும் பெற ..
வாழ்த்துகிறேன்....
என் சகோதரியுமானவளுக்கு!என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிகாப்பது போல, நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.
இந்த நட்புக்கு இலக்கணமானவள் நீ!
பாத்திமா, இதை படிக்கும் பொழுது உங்கள் கண்ணின் ஓரம் நீர் எட்டி பார்த்திருந்தால் அது என் இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி அல்ல..நம் நட்புக்கு கிடைத்த வெற்றியடி பெண்ணே!
படிச்சுட்டு எப்படி feel பண்ணீங்கன்னு அப்படியே கீழ comments போட்டுடுங்க! அப்படியே Party எங்கன்னு சொல்லிடுங்க! அப்புறம் நம்ப பிரியாணி??