வியாழன், 21 ஆகஸ்ட், 2014

தந்தையுமானவன்!

பெண் பிள்ளைகளை பெற்ற ..
தகப்பன்கள் பாக்கியசாலிகள்..(தங்க மீன்கள்)
அண்ணணன், தம்பிகளை பெற்ற ..
பெண் பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள்..(நான்)

அண்ணா என்று ஒரு மூன்று எழுத்தில்.. என் அண்ணனை அடைக்கி விட முடியாது!

எல்லாருக்கும் அண்ணன், தம்பி இருக்கலாம், ஆனால் அவர்கள் திருமணத்திற்கு  பிறகும், அதே பொறுப்புடன், பாசத்துடன் இருக்கமுடியுமா?
கொஞ்சம் சிரமம் தான், அவர்கள் குடும்பத்தை கவனிக்கணும் அல்லவா?
என் அண்ணன்  எப்பவும், இப்பவும், ஒரே மாதிரி என்னை வழி நடத்துகிறார். அப்படி அண்ணி அமைந்த வகையிலும் நான் பாக்கியம் செய்து இருக்கிறேன்.




தந்தையுமானவன்!

தந்தையை தாயுமானவனாய்
பெற்ற அதிர்ஷ்டசாலி நான்தான்..
சகோதரனை தந்தையுமானவனாய்
பெற்ற பாக்கியசாலியும் நான்தான்..
தந்தையுமானவனே!
வழி நடத்துகிறாய் நீ..என்னை
அன்பு நெறிகொண்டு..
நான் வாழ்வில் முன்னேறுகிறேன்..
வெற்றி நடைகொண்டு..
என் தந்தையுமானவனுக்கு..
என் இனிய...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


                                     

இன்றும் ஞாபகம் இருக்கிறது,
நான் வேலைக்கு போக இருந்த முதல் நாள், அஷ்டமி இன்று சேர வேண்டாம் என்று சொன்னாய், பிறகு ஒரு நல்ல நாளில் வேலைக்கு சென்றேன்..இதோ வருடங்கள் ஓடிவிட்டன..அதே கம்பெனி, நல்ல பெயர்..நல்ல வேலை..எல்லாம் உன் ஆசிர்வாதமும்..வழி நடத்தலும் தான்..இன்று நான் Award வாங்கும் வரை கொண்டு சென்று இருக்கிறது..
இதோ உன் பிறந்த நாள் அன்று ..
இந்த Award உனக்கு அர்ப்பணிக்கிறேன்.
இதைவிட Costly-யா உனக்கு வேற ஏதும் GIFT தேவை இல்லைதானே! (ஹி ஹி..)


திருக்குறள் 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.


3 கருத்துகள்: