வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பாலர் பருவமும் & ஆரம்ப கல்வியும்!

சமயத்துல, நம்ம ரத்த பந்தத்தில, இல்ல சொந்தத்தில சில Silent killer இருப்பாங்க அப்படிதான் ஒருத்தர், என் அம்மா வழி தாத்தா, "தமிழ் தாத்தா" அப்படி ஒரு கவிஞர், சினிமாக்கு பாட்டு எழுதி இருக்காரு, நிறைய புத்தகம் போட்டு இருக்காரு! அவரு தமிழ் மேல இருந்த ஆர்வத்திலே, எங்கள எல்லாம் தமிழ் மீடியத்துல தான் படிக்க வைக்கனும்னு உறுதியா சொல்லிட்டாரு.

அதுல கொடுமை என்னன்னா, அவரு சொல்ற எதையுமே காதுல போடாத எங்க ஐயா, இத மட்டும் காது கொடுத்து கேட்டுட்டாக!

அதனால் நாம L.K.G, U.K.G  எல்லாம் படிக்கல நேரடி ஒன்னாம்ப்புதான், அங்கு ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே இருந்தது.

அதுவும் பாத்தீங்கன்ன, ஒன்றாம் வகுப்பிலிருந்து, ஐந்தாம் வகுப்பு வரை Super படிப்பு மச்சி.


ஐந்தாம் வகுப்பில் நான்தான் Class leader,  நல்லா படிக்கிறோம் என தலைகனம் நிறைய. எதற்காகவும் Adjust பண்ண மாட்டேன், எங்கள் School-ல் நடக்கும் "பாலர் சபா" வில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி எல்லாத்துலயும் பரிசு தட்டி செல்வேன்.. அப்பத்தான் School-ல்ல Election வந்துச்சு School People Leader பதவிக்கு. எல்லா Class leader நடக்கிற போட்டி. Class leaders வேட்பாளர்கள்
( உங்களுக்கு தெரியாததா? ) நான்காம், மற்றும் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் வாக்களிக்க(??) உரிமை பெற்றவர்கள்!

அவர்கள் முன்னிலையில், கொடுக்கிற தலைப்பில் 10  நிமிடம் பேசணும்(தலைப்பு அப்பத்தான் தருவாங்க, ஐந்து நிமிடம் தயார் பண்ணிக்க கொடுப்பாங்கா), அதிலிருந்து இருவர் தேர்ந்து எடுத்தார்கள், அதில் நானும், பூமா என்கிற பெண்ணும் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றோம். அப்பொழுதும் 10  நிமிட பேச்சு, என் பேச்சுக்கு கிட்டத்தட்ட மழை மாதிரி எனக்கு கை தட்டல்!

 ரெண்டு பேர்ல யாரு செலக்ட் பண்றீங்க, நாங்க பேர சொன்னதும் கை தூக்கணும்! பேப்பர் இல்லை, பெட்டி இல்லை, பைசா செலவில்லாத Election- பா!  ஒரே ஆளு ரெண்டு பேருக்கும் கை தூக்கினா எப்படின்னு யோசிக்கிறீங்க தானே? அதான் இல்லை. மொத்த பசங்க, ரெண்டு பேருக்கும் கிடைச்ச ஒட்டு  vary ஆச்சுன்னா, திரும்ப கை தூக்க சொல்வாங்க! ஹிம்

அப்படி கேட்டதும் பய புள்ளைக, எனக்கு கொஞ்ச பேரும், அவளுக்கு நிறைய பேறும் வாக்களித்தார்கள்(?!?)! நான் சிகப்பாக இல்லையே என வருத்தப்பட்ட ஒரே தருணம்..அந்த தருணம். ஏன்னா பூமா மிகவும் சிகப்பாக, அழகாக இருப்பாள்!

என்னதான் திறமை நமக்கு இருந்தாலும், சமையத்துல அழகு அப்படியேஅள்ளிக்கிட்டு ஜெய்ச்சுடுங்க! என்னைய கேட்டாலே அவளுக்குத்தான் ஓட்டு போட்டுருப்பேன்! அழகா இருக்கிறவங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கிறது நியாயம்தானே!

அப்பொழுது, முதல் ரேங்க் தான் வாங்குவேன், தவறிப்போனா ரெண்டாம் ரேங்க். வரலாறு புவியல்ல கூட 100/100 தான். இன்னும் ஞாபகம் இருக்கிறது, ஐந்தாம் வகுப்பில், வரலாறு புவியல் பாடத்தில்  100/100வாங்கி இருந்தேன், என்னைய விட்டே எங்க வரலாறு/புவியல் ஆசிரியை அழைத்து வர சொன்னார் எங்க class teacher. "எப்படி 100/100 போட்டீர்கள் என கேட்டார்? ஆசிரியை, "மதிப்பெண் குறைக்க வாய்ப்பே இல்லை, அப்படி இருக்கிறது ஒவ்வொரு பதிலும்! என சொன்னார்". இப்பதான் பத்து வருசமா 100/100 போடாறாங்க, தமிழும், வரலாறு புவியல் 100/100 என்பது 2000 வருடம் வரை வாய்ப்பே இல்லை!

அதுவும் அந்த ரேங்க், அந்த பெயர் வாங்கிட்ட சான்சே இல்லைங்க. அதுவும் ஒரு போதை தான் இல்லை?, திரும்ப திரும்ப எடுத்துக்குட்டே இருக்கணும்!, பின் தங்கிட்டா கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு Mood out தான். நல்ல விசயத்தில, அதுவும் படிக்கிற விசயத்துல ஒரு போதை இருக்குறது தப்பில்லையே!

                                

ஐந்தாம் வகுப்பு முடிந்து, ஆறாம் வகுப்பிற்கு(தமிழ் மீடியம்), மேல்நிலை பள்ளிக்கு நுழைவு தேர்வு எழுதி, K.H.S.S -ல் தேர்வு பெற்றேன். அங்கே தான் விழுந்தது எனக்கு அடி!  சாதாரண அடி இல்லை! சம்மட்டியால் அடித்த அடி போல்!

திருக்குறள்:
அதிகாரம்: கல்வி
குறள் 396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

பொருள்:
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்..

Image Courtesy: Web

5 கருத்துகள்: