வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஜெய்ப்பது நிஜம்!

உணர்வுகளை  கட்டுபடுத்துவதில் தான் நாம் மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறோம் என்பது உங்களுக்கு தெரியும்

நம்முடனே வாழும் மிருங்கங்களினால் ஏற்படும்
வஞ்சம்,
துரோகம்,
துன்பம் இவைகளை பொறுமையாய் கடப்பதில் மூலம் நாம் வாழ்வில் ஜெயிப்பது நிஜம்.

மன்னிப்பது நல்ல குணம்..
மறப்பது தெய்வகுணம்..கேள்விப்பட்டு இருப்பீர்கள்

விட்டு கொடுத்து, மன்னித்து விட்டு வாழும் பெண் தெய்வங்களால் தான் இன்றும் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இல்லையெனில் பல குடும்பங்கள் தலை எடுக்காமல் போயிருக்கும்.

அனைவருக்குமே திருந்த மறு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆணோ, பெண்ணோ உங்களுக்கு திருந்த வாய்ப்பு  கிடைத்து இருந்தால். இப்பொழுதே திருந்தி விடுங்கள்.இல்லை நீங்கள் ஏதும் தவறு செய்பவர்கள் எனில் இதை படிக்கும் பொழுதாவது திருந்தவாது முயற்சி செய்யுங்கள். இல்லை இந்த சமுகம் உங்களை கல்லால் அடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் எனும் நிலையில் அவர்களுக்கான தண்டனை கிடைக்கும் வரை ஓய கூடாது.

நமது இந்திய பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் இன்றும் உலக அளவில் பெருமையாய் பேசப்படும் அளவில் இருப்பதில் நமது அனைவருக்குமே பெருமை. அதுவும் தமிழ்  பண்பாட்டை கட்டி காப்பதில் நம் தமிழர்களுக்கு மிகவும் அக்கறை உண்டு என்பதை நம் சமுகத்தின் மூலம் நான் அறிவேன்.

என் பதிவை படிக்கும் உங்கள் மனதில்,
நேர்மறையான சிந்தனை,
இந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்லது செய்யனும்
இந்த பிறவி பயனை நல்லபடியா கடக்குனும்னு ஏதேனும் ஒன்று உங்கள் மனதில் உதித்தால் நான் பிறந்த பயனை அடைந்துவிட்டதாக உணர்வேன்.

தஞ்சையில் பிறந்தவள்..தமிழ் மண்ணின் சுவாசத்தை அறிந்தவள்..

உங்கள் ஆதரவு என்னை ஊக்கபடுத்தும். நிறைய எழுதனும்னு ஆசை ..பார்க்கலாம்!!!

1 கருத்து: