புதன், 3 டிசம்பர், 2014

பாயம்மா (தாயம்மா!)


எனக்கு இஸ்லாம் மதத்தின் மிகுந்த மரியாதை. அவர்கள் இறை நம்பிக்கையும், அவர்கள் இறைவழிபாடும் என்னை ஆச்சர்ய பட வைக்கும். இதற்கெல்லாம் முதல் காரணம், எங்கள் பாயம்மா! இல்லை இல்லை எங்கள் தாயம்மாவாக இருந்தார் எங்கள் சிறு வயது பருவத்தில். பாயம்மா எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்தவர். அவர்களுக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள்.

எங்கள் மீது மிகுந்த பாசமாக இருப்பார். என்ன செய்தாலும் எங்க வீட்டுக்கு ஒரு பார்சல் அனுப்பிவிடுவார்கள்.

அப்பெல்லாம் பாயம்மா வீடு பிரியாணி சாப்பிட்டு தான் வளர்ந்தேன்னு சொல்லலாம். ரம்ஜான், பக்ரித் மட்டும் அல்ல, அவர்கள் பிள்ளைகளில் நான்கு பையன்கள் ஒவ்வொருத்தராக, துபாய் சென்றார்கள். அவர்கள் ஒவ்வொரு முதல் முறை துபாய் செல்லும்பொழுது "பயணம் செய்ய " விருந்து. அவர்கள் ஊருக்கு விடுமுறைக்கு ஊருக்கு வரும் பொழுது விருந்து என பாயம்மா வீடு களை கட்டும்.



பக்ரித் பண்டிகைக்கு, வசதி படைத்தவர்கள், ஏழைகளுக்கு "கறி" இலவசமாக வழங்கும் அவர்கள் வழிமுறை, இஸ்லாம் மதத்தில், எனக்கு மிகவும் பிடிக்கும் ( ஏழைகளுக்கு உதவுவது). , அதற்காக பாயம்மா வீட்டில் 6 , 7 ஆடு வெட்டுவார்கள்.

அவர்கள் பையன்கள் துபாயிலிருந்து வரும் பொழுது, அவர்கள் கொண்டு வந்த பெட்டி பிரிக்க ஒரு நாள் குறித்து, அவர்கள் நெருங்கிய உறவினர்களை வரவழைத்து தான் பிரிப்பார்கள்.அன்னைக்கும் செம விருந்து தான். எங்களுக்கும் things கொடுப்பார்கள், எனக்கு clip, fancy item, dress material கிடைக்கும், அதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல், சும்மாவா? துபாய் things ஆச்சே.

பாயம்மா செய்த பிரியாணி போல் இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. அப்படி ஒரு ருசி. அன்பையும், பிரியாணியையும் அள்ளி தருபவர்கள் பாயம்மாக்கள்!

We miss you Baayamma!!

இஸ்லாம் மதத்துடன், நான் சேர்ந்தே பயணிக்கிறேன். இஸ்லாம் தோழிகள், என் சகோதரிகளாக என் வாழ்வில் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.  (தொடரும்) 



1 கருத்து: